ஏறக்குறைய 100 அதிர்ச்சித் தாக்குதல் படையினர், அத்துடன் வான் குழு மற்றும் உதவியாளர்கள்.
7 கடத்தல்காரர்கள். தெரியாதளவு உகண்டா படையினர்
இழப்புகள்
1 அதிர்ச்சித் தாக்குதல் வீரர் கொல்லப்படல் 5 அதிர்ச்சித் தாக்குதல் வீரர்கள் காயம்
கடத்தல்காரர்கள்: 7 பேரும் கொல்லப்படல் உகண்டா படையினர்: 45 உகண்டா படையினர் கொல்லப்படல்[2] தெரியாதளவு உகண்டா படையினர் காயம் 11 மிக்-17 விமானங்கள் அழிப்பு.
4 பணயக்கைதிகள் கொல்லப்படல் 10 பணயக்கைதிகள் காயம்
என்டபே விமான நிலையத்தின் பழைய முடிவிடம் (2008)
என்டபே நடவடிக்கைஇசுரேலிய பாதுகாப்புப் படைகளின் அதிர்ச்சித் தாக்குதல் படையினரால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் வைத்து 4 சூலை 1976 அன்று நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத எதிர்ப்பு பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கையாகும்.[3] ஒரு வாரத்துக்கு முன், 27 சூன் அன்று பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் (Air France) வான் விமானம் 248 பயணிகளுடன் பலஸ்தீன விடுதலைக்கான மக்களாதரவு முன்னனி மற்றும் செருமனி விடுதலைக் குழுக்களினால் கடத்தப்பட்டு உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவிற்கு அருகிலுள்ள என்டபேக்கு கொண்டு செல்லப்பட்டது. கடத்தல்காரர்கள் இசுரேலியர்களையும் யூதர்களையும் பெரிய குழுவிலிருந்து வேறுபடுத்தி வேறு ஒரு அறையில் பலவந்தப்படுத்தி அடைத்தனர்.[4][5][6] அன்று பின்னேரம், 47 யூதரற்ற, இசுரேலியரற்றோர் விடுதலை செய்யப்பட்டனர்.[4][6][7] அடுத்த நாள், மேலும் 101 யூதரற்ற பணயக் கைதிகள் பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் வான் விமானத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்ட யூத, இசுரேலிய பயணிகளுடன் யூதரல்லாத விமான மைக்கல் பாகோஸ் பணயக் கைதிகளாக கொலை அச்சுறுத்தலுக்குள்ளாயினர்.[8][9]