எஸ். குலேந்திரன்
அதி வணக்கத்துக்குரிய சபாபதி குலேந்திரன் (Sabapathy Kulendran, 23 செப்டம்பர் 1900 – 14 பெப்ரவரி 1992) இலங்கைத் தமிழ்க் குருக்களும், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கைகுலேந்திரன் 1900 செப்டம்பர் 23 அன்று வழக்கறிஞர் சபாபதி என்பவருக்குப் பிறந்தார்.[1] குலேந்திரனின் சாம் சபாபதி யாழ்ப்பாண நகர முதல்வராக இருந்தவர்.[1] குலேந்திரன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள செரம்பூர் கல்லூரியில் இறையியலில் பட்டம் பெற்றார். 1934-ஆம் ஆண்டில் மதப்போதகராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] குலேந்திரன் யாழ்ம்மாணம் இளைஞர் காங்கிரசின் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.[2][3] குலேந்திரன் விசுவலிங்கம் என்பவரின் மகள் மதுரம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.[1] பணிகுலேந்திரன் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் 1வது ஆயராக 1947 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][4] 1970 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.[1] மறைவுஇளைப்பாறிய பின்னர் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து வந்த குலேந்திரன் 1992 பெப்ரவரி 14 இல் இறந்தார்[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia