எஸ். கே. குருநாதன்எஸ். கே. குருநாதன் (S. K. Gurunathan, 1 ஆகத்து 1908 - 5 மே 1966) என்பவர் ஒரு விளையாட்டுப் பத்திரிகையாளர் மற்றும் இந்தியாவில் துடுப்பாட்ட புள்ளிவிவர முன்னோடிகளில் ஒருவர். குருநாதன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். [1] 1928 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழின் விளம்பரப் பிரிவில் தனது பத்திரிகை வாழ்க்கையைத் துவக்கினார். இவர் 1938 இல் செய்தியாளரானார். 1958 முதல் இறக்கும் வரை விளையாட்டுப் பகுதியின் ஆசிரியராக இருந்தார். இவர் 1940 களில் உள்ளூர் துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளை செய்திகளை உள்ளடக்கிய மெட்ராஸ் ஆனுவல் இதழை நிறுவினார். தி இந்துவில் இருந்தபோது, இவர் ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைம் என்ற இதழைத் தொடங்கினார். அது சுமார் இருபது ஆண்டுகள் நடத்தப்பட்டது. இவரது இறப்பிற்குப் பிறகு தொழிலாளர் பிரச்சனையால் வெளியீட்டு நிறுத்தப்பட்டது. குருநாதன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முதல் கெளரவ துடுப்பாட்ட புள்ளியியல் நிபுணர் ஆவார். 1949 முதல் 1950 ஆண்டு இவர் இறக்கும் வரை அந்த பதவியில் இருந்தார். [2] குருநாதன் 1946 ஆம் ஆண்டு விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பைப் போலவே இந்தியன் கிரிக்கெட் என்ற ஆண்டிதழை நிறுவினார். இவர் இறக்கும் வரை அதன் ஆசிரியராக இருந்தார். விஸ்டனின் இந்தியப் பிரிவுக்கும் இவர் தொடர்ந்து பங்களித்தார். இவர் 1947-48 இல் ஆத்திரேலியா, 1952 இல் இங்கிலாந்து, 1954-55 இல் பாக்கித்தான் ஆகிய நடுகளுக்கு இந்திய அணி மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் குறித்த செய்திகளை அளித்தார். மேலும் 1961-62 எம்.சி.சி இந்திய சுற்றுப்பயணத்தை தி டைம்சுக்காகச் செய்தி அறிக்கைகளை உருவாக்கினார். [2] இவர் 12 ஆண்டுகள் ரஞ்சி டிராபி மற்றும் மூன்று தொகுதிகள் ஸ்டோரி ஆஃப் தி டெஸ்ட் என்ற பெயரிலான புத்தகங்களை எழுதியுள்ளார். குருநாதன் 1963-64ல் மெட்ராஸ் விளையாட்டு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்-தலைவராக இருந்தார். இவர் தனது இளமை பருவத்தில் புது நடையியல்பான குச்சக் காப்பாளராக இருந்தார். மேலும் மெட்ராஸ் மாகாணப் போட்டிகளில் இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் தி இந்துவில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். [2] குறிப்புகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia