எஸ். முத்துக்குமாரன்
ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளர் நாயகமான எஸ். முத்துக்குமாரன் அவர்கள் ஈழத்தைச் சேர்ந்த வானொலி, மேடைநாடாகாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள சமகாலத்தவராகும். இவர் சமகால எழுத்தாளரான சைவப் புலவர். எஸ். தில்லைநாதன் அவர்களின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கைக் குறிப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் துறைநீலாவணையில் சாமித்தம்பி, மாரிமுத்து தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1938-03-14 இல் பிறந்தார். மண்டூரை புகுந்தகமாகவும், கல்லடியைத் தற்போது வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார். அரச பணிஅரச சேவையில் 1958 ஆம் ஆண்டு இணைந்து பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் உதவிப் பதிவாளர் நாயகமாகப் பதவி வகித்து 1998 இல் ஓய்வு பெற்றார். இலக்கியப் பணி1961 ஆண்டு முதல் வானொலி நாடக எழுத்தாளராக படைப்புத்துறைக்குள் நுழைந்தார். சமயம் இலக்கியம் சம்பந்தமான நாடகங்களையே இவர் எழுதி வந்துள்ளார். இவரது ஆக்கங்கள் சொந்தப் பெயரிலும், சுகீர்தரன் என்னும் புனை பெயரிலும் வெளிவந்தன. கட்டுரைகள்
சிறுகதைகள்
நூல்கள்வானொலியில் வெளியான நாடகங்களைத் தொகுத்து வீரவில்லாளி எனும் நாடகப் புத்தகம் 2008 வெளியானது. மேடை நாடகம்நாரதர் விளைத்த கலகம் எனும் கம்சரம்மானை இலக்கியத்திலுண்டான பகுதி நாடகமாக 1964-11-03 இல் தினகரனில் வெளியாகியது. விருதுகள்
வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள்
|
Portal di Ensiklopedia Dunia