ஏறுகோள்
ஏறுகோள் முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் விளையாட்டு.
ஏறுகோள் விளையாட்டு பற்றிக் கலித்தொகை நூலின் முல்லைக்கலியில் முதல் 6 பாடல்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன. கலித்தொகைப் பாடல்கள் தொன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
மல்லல் மன்றத்து முரண்தலையில் காளைகளைத் தூண்டிவிட்டு தண்ணுமை முழக்கத்துடன் இது நடைபெற்றதைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. [ 1]
அக்காலத்து மக்கள் இந்த விளையாட்டு விழாவை ஏறுகோள் பாணி ஏறுகோள் சாறு என்றல்லாம் வழங்கினர்.
ஏறு தழுவும் ஆயர்குல வீரனைப் பொதுவன் என்பர் [ 2]
நல்லினத்து ஆயர் பாண்டியன் மரபினர் [ 3]
கோட்பாடு
காளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள். [ 4]
ஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார் [ 5]
காளையை அடக்கிய ஆயருக்கு பெண்ணைக் கொடுப்பர் [ 6]
நல்லினத்து ஆயர் பாண்டியன் மரபினர் [ 7] கோட்டினத்து ஆயர் [ 8] கோவினத்து ஆயர் [ 9] புல்லினத்து ஆயர் [ 10] முதலானோர் ஏறுகோள் விளையாட்டில் ஈடுபட்டனர்.[ 11]
செய்திகள்
ஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).
இந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர். [ 12]
ஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான் [ 13]
ஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர் [ 14]
கோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு. [ 15]
புண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர். [ 16]
புண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர் [ 17]
பழக்கம்
பிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர். [ 18]
காளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர் [ 19]
இந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர் [ 20]
துறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர் [ 21]
காளைகள்
சிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும் [ 22]
வெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.
உவமைகள்
போரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல
ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது. [ 23]
ஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது [ 24]
பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது [ 25]
ஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது [ 26]
புலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர் [ 27]
அந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது. [ 28]
இருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது. [ 29]
சிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது. [ 30]
பட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான். [ 31]
கூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான். [ 32]
வெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான் [ 33]
காளை நிறத்துக்கு உவமைகள்
கரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம் [ 34]
செம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம் [ 35]
குரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம் [ 36]
புகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள் [ 37]
சேய் – சேயோன் போன்ற நிறம் [ 38]
அடக்கிய முறை
கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள். [ 39]
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
↑
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலைநவில் எறுழ்தோள் வீசி வலன்வளையூஉப்
பகல்மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண்தலை – பெரும்பாணாற்றுப்படை அடி 143 முதல்
↑ கலித்தொகை 101-16
↑ கலித்தொகை 104-4
↑ கொல்லேற்றுக் கோடு அஞ்சிவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் - கலித்தொகை 103-63
↑ கலித்தொகை 103-71
↑ கலித்தொகை 104-75
↑ கலித்தொகை 104-4
↑ கலித்தொகை 103-33
↑ கலித்தொகை 103-37
↑ கலித்தொகை 103-48
↑ கலித்தொகை 105-53மு65
↑ கலித்தொகை 102-18
↑ கலித்தொகை 102-13
↑ கலித்தொகை 102-35
↑ கலித்தொகை 101-43
↑ கலித்தொகை 101-7
↑ கலித்தொகை 104-63
↑ கலித்தொகை 101-1மு, 102-1மு, 103-1மு.
↑ கலித்தொகை 101-12, 104-26, 105-26
↑ கலித்தொகை 104-17மு
↑ கலித்தொகை 101-13, 14
↑ கலித்தொகை 101-8
↑ கலித்தொகை 104-49
↑ கலித்தொகை 106-21
↑ கலித்தொகை 101-18
↑ கலித்தொகை 104-57
↑ கலித்தொகை 103-56
↑ கலித்தொகை 101-25, 103-43
↑ கலித்தொகை 101-30
↑ கலித்தொகை 103-25
↑ கலித்தொகை 103-30
↑ கலித்தொகை 103-53
↑ கலித்தொகை 104-37
↑ கலித்தொகை 105-10
↑ கலித்தொகை 105-12
↑ கலித்தொகை 105-15
↑ கலித்தொகை 105-17
↑ கலித்தொகை 105-19
↑ கலித்தொகை 105-30மு