ஏ. கலியமூர்த்தி
ஏ. கலியமூர்த்தி (A. Kaliyamurthy) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியாவார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு காவல் துறையில் திருச்சி, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பல்வேறு பொறுப்புகள் மற்றும் பணிகளில் இருந்துள்ளார். கடைசியாக திருச்சியில் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில் முதல்வர் விருதையும், சிறப்பான சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்கத்தையும் பெற்றார்.[1] ஓய்வு பெற்ற பிறகு இவர் ஓர் ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கைப் பேச்சாளராக தனது உரைகளின் மூலம் மக்களை ஊக்குவித்து வருகிறார்.[2] கல்விகலியமூர்த்தி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் பிறந்து, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டமும், சென்னையில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று தனது கல்வியை முடித்தார்.[3] தொழில்1976 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ்நாடு காவல்துறை[5] பணியில் சேர்ந்த கலியமூர்த்தி அக்டோபர் 30, 2010 இல் ஓய்வு பெறும் வரை 35 ஆண்டுகள் பணியாற்றினார். தனது பதவிக் காலத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பதவியை அடைந்தார்.[4] தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாசிக் (1980), லக்னோ (1982), காசுமீர் (1985) ஆகிய இடங்களில் நடைபெற்ற அகில இந்திய காவல் பணிப் போட்டி மற்றும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஊக்கமளிக்கும் பேச்சாளர்ஓய்வுக்குப் பிறகு, முனைவர் ஏ. கலியமூர்த்தி ஊக்கமளிக்கும் பேச்சாளராக மாறியுள்ளார்.[5] தனது அனுபவங்களை உரைகள் மூலம் பகிர்ந்து மக்களை ஊக்குவிக்கிறார்.[6] and inspiring millions of people through his speeches[7][8]. தனிப்பட்ட வாழ்க்கைசூர்யகலா என்பவரை கலியமூர்த்தி திருமணம் செய்துகொண்டார். மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia