ஒசூர் வானூர்தி நிலையம்
ஒசூர் வானூர்தி நிலையம்( ஐஏடிஏ : VO95) ஒரு தனியார் வானூர்தி தளம் ஆகும் இது இந்தியாவின், தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து 10 கிலோமீட்டர்கள் தென்மேற்கில் பேளகொண்டபள்ளி என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த வானூர்தி தளம் தனுஜா வான்வெளி மற்றும் வானூர்தி லிமிடெட் (தால்) (ஆங்கிலத்தில் -Taneja aerospace and aviation Limited (TAAL)) என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. இது வானூர்திகளை உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யும் தனியார் துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த வானூர்தி நிலையம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் தனியார் பயன்படுத்தும் வகையின் கீழ் அனுமதியையும், ஒப்புதலையும் பெற்றதாகும். கட்டுமானம்ஓசூர் வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை 7012 அடி நீளம் மற்றும் 09/27, 150 அடி அகலமும் கொண்டது. ஏர்பஸ் ஏ 320 மற்றும் 737 போயிங் வானூர்திகள் இரவு நேரத்திலும் இறங்கும் வசதிகள் கொண்டது. ஏர்பஸ் 330 மற்றும் போயிங் 777 போன்ற பெரிய வானூர்திகளுக்கும் இடமளிக்கும் விதத்தில் உள்ளது. வானூர்திகளுக்கான இடங்கள்ஓசூர் வானூர்தி நிலையத்திற்கு வர்த்தக விமான சேவைக்கான உரிமம் தரப்படவில்லை. எனினும் பல இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பாக ஸ்பைஸ் ஜெட் , கோஏர் நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் தமது வானூர்திகளை இங்குத் தரை இறக்கி, இங்குள்ள வசதிகளைக் கொண்டு வானூர்தி 1200 மணி நேர ஆய்வுகள் மற்றும் வானூர்திகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் போன்றவை செய்யப்படுகின்றன. விமானங்களைத் தரை இறக்கி நிறுத்திவைக்க ஓசூர் வானூர்தி நிலையத்தை வானூர்தி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. நிறுத்துமிடம்இங்கு மூன்று நிறுத்துமிடங்கள் உள்ளன. ஏர்வொர்க்ஸ் ஹேங்கர் 1 இல்321 ஒரு ஏர்பஸ் அல்லது ஒரு போயிங் 737-800 அல்லது இரண்டு ஏடிஆர்-72 ஆகியவற்றைக் கையாளும் திறன் உள்ளது. மேலும் ஹேங்கர்2 இல் ஒரே நேரத்தில் மூன்று போயிங் 737 ஐ நிறுத்தி வைக்க முடியும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia