ஒட்டுநிலை (மொழியியல்)இலக்கண நூலார் பகுதி என்று கூறுவதை மொழி நூலார் அடிச்சொல் என்பர். இத்தகைய அடிச்சொற்கள் இரண்டு இணையும் போது அவற்றுள் ஒன்று சிதையாமல் இருக்க மற்றொன்று சிதைந்து விடும். இவ்வாறு அடிச்சொற்கள் இணைந்த நிலையை ஒட்டுநிலை (Agglutination) என்பர். எடுத்துக்காட்டு: அறி+த்(ந்)+த்+ஆன்=அறிந்தான்.[1][2][note 1] உலகில் பெரும்பான்மையான மொழிகள் ஒட்டுநிலையைச் சார்ந்தே வருவன. சித்திய மொழி, திராவிட மொழிகள், சப்பானிய, கொரிய, பினிஷிய, பாஸ்க் மொழிகளும் தென் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலிய பழங்குடியினரின் மொழிகளும் இவ்வகை மொழிகளேயாகும். இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia