ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (Oru Oodhappu Kan Simittugiradhu) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற புதினத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படம் முத்துராமனுக்கு சிறந்த தமிழ் இயக்குநருக்கான பிலிம்பேர் விருதையும், கமலகாசனுக்கு சிறந்த நடிகர் - தமிழ் பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. கதைரவியும் ராதாவும் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ரவியின் நண்பன் தன்னால் ஒரு வாரத்தில் ராதாவை காதலிக்க வைக்க முடியும் என்று சவால் விடுகிறான். தான் சொன்னது சரி என்பதை நிரூபிக்க முடியாமல், அந்த நண்பன் ராதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறான். தக்க சமயத்தில் ரவி அந்த இடத்திற்கு வருகிறான். இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இறுதியில் ரவி தன் நண்பனை தற்செயலாகக் கொன்றுவிடுகிறான். ரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அவன் ராதாவிடம் தன்னை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறான். ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் காந்தி செயந்தி காரணமாக ரவிக்கு தண்டனைக் குறைப்பு தரப்பட்டு விடுதலை ஆகிறான். ரவி தனது சொந்த ஊருக்குத் திரும்புவதிலிருந்து படம் தொடங்குகிறது. ராதா சுந்தரம் என்பவனை மணந்திருக்கிறாள். ரவி அவளைச் சந்திக்கிறான். இனி தன்னுடைய வாழ்வில் தலையிட வேண்டாம் என்று ராதா கூறுகிறாள். அவளை மறக்க முடியாமல், ரவி யாரிடமும் ஒட்டாமல், சலிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்கிறான். தன்னை மறந்துவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்குமாறு ராதா அவனிடம் கெஞ்சுகிறாள். ஒரு நாள் மட்டும் தன்னுடம் மனைவியாக வாழ்வதாக நடி, வேறு எந்த தவறும் நடக்காது, அந்த நினைவிலேயே தன் எஞ்சிய வாழ்வை கழித்துவிடுவதாக ரவி கூறுகிறான். ஒன்றாக வாழ்வது குறித்து தான் நிறைய கனவுகளைக் கட்டியிருந்ததாகவும், இந்த "ஒரு நாள்" தனது கனவை தீர்த்து வைக்கும் என்றும் அவன் விளக்குகிறான். இறுதியில் ராதா அதற்கு சம்மதிக்கிறாள். அந்த ஒரு நாளில் அவர்கள் காதலர்களாக இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பிறகு என்ன நடந்தது என்பதே கதை. நடிகர்கள்
தயாரிப்புஇத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[4] இப்படம் மூலம் எஸ். சங்கரன் தயாரிப்பாளராக அறிமுகமானார்.[1] இப்படத்திற்கு பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். "ஆண்டவன் இல்லா உலகமிது" எனும் பாடல் பாண்டிச்சேரி அருகே படமாக்கப்பட்டது.[5] பாடல்கள்வெ. தட்சிணாமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.[1] பாடல் வரிகள் கண்ணதாசன்,[5] குமரதேவன், ஆர். பழனிச்சாமி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. "நல்ல மணம்" பாடல் கல்யாணவசந்தம் ராகம் அடிப்படையாக கொண்டது.
விருதுகள்தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia