ஓம் பிரகாசு மாத்தூர்
ஓம் பிரகாசு மாத்தூர் (Om Prakash Mathur; பிறப்பு சனவரி 2,1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய சிக்கிம் மாநில ஆளுநரும் ஆவார். இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆவார். ஆரம்பத்தில், இவர் பைரோன் சிங் செகாவத்தால் வளர்க்கப்பட்டார். ஆனால் பின்னர் இவர் பாஜகவில் செல்வாக்குப் பெற்ற தலைவராக ஆனார். இவர் ஆர். எஸ். எஸ். பிரச்சாரகராகவும் பின்னர் குசராத்து பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். மாநிலங்களவை உறுப்பினர்2016 மே 29 அன்று, சூன் 11 அன்று நடைபெற்ற மாநிலங்களவை இரு வருடத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களில் ஒருவராக இவர் இராசத்தானிலிருந்து போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.[2] பிறப்பும் கல்வியும்ஓம் பிரகாசு மாத்தூர் இராசத்தானின் பாலி மாவட்டத்தின் பாலி வட்டத்தில் உள்ள பால்னா அருகிலுள்ள பெடல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1952-இல் பிறந்த இவர், ஜெய்ப்பூரில் உள்ள இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆளுநராகஓம் பிரகாசு மாத்தூரை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 27 சூலை 2024 அன்று சிக்கிம் ஆளுநராக நியமித்துள்ளார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia