ககனேந்திரநாத் தாகூர்
ககனேந்திரநாத் தாகூர் (Gaganendranath Tagore) (1867 செப்டம்பர் 17 - 1938 பிப்ரவரி 14) இவர் வங்காள கலைப் பள்ளியின் இந்திய ஓவியரும் மற்றும் கேலிச் சித்திரம் வரைபவருமாவார். இவரது சகோதரர் அபனீந்திரநாத் தாகூருடன் சேர்ந்து, இவர் இந்தியாவின் ஆரம்பகால நவீன கலைஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். வாழ்க்கை மற்றும் தொழில்ககனேந்திரநாத் தாகூர் ஜோராசங்காவில் பிறந்தார். அதன் படைப்பாற்றல் வங்காளத்தின் கலாச்சார வாழ்க்கையை வரையறுத்தது. இவரது சகோதரர் அபனீந்திரநாத் வங்காள கலைப் பள்ளியின் முன்னோடி மற்றும் முன்னணி நிபுணராக இருந்தார். இவர் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் மருமகனும் மற்றும் நடிகை ஷர்மிளா தாகூரின் தந்தைவழி தாத்தாவும் ஆவார். ககனேந்திரநாத் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் ஓவியர் ஹரிநாராயண பண்டோபாத்யாயின் கீழகத்திய ஓவியப் பயிற்சியினைப் பெற்றார். 1907 ஆம் ஆண்டில், தனது சகோதரர் அபனீந்திரநாத்துடன் சேர்ந்து, இவர் இந்தியக் கலைச்சங்கத்தை நிறுவினார். பின்னர் அது ரூபம் என்ற செல்வாக்குமிக்க பத்திரிகையை வெளியிட்டது. 1906 மற்றும் 1910 க்கு இடையில், கலைஞர் ஜப்பானிய தூரிகை நுட்பங்களையும் தூர கிழக்கு கலையின் செல்வாக்கையும் தனது சொந்த படைப்புகளில் சேர்த்து ஒருங்கிணைத்தார். இரவீந்திரநாத் தாகூரின் சுயசரிதையான ஜீவன்ஸ்மிருதி (1912) க்கான இவரது ஓவிய எடுத்துக்காட்டுகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர் தனது சைதன்யா மற்றும் பில்கிரிம் போன்ற தொடர்களில் தனது சொந்த அணுகுமுறையை வளர்த்துக் கொண்டார். ககனேந்திரநாத் இறுதியில் வங்காளப் பள்ளியின் மறுமலர்ச்சியைக் கைவிட்டு கேலிச்சித்திரத்தை கையில் எடுத்துக் கொண்டார். தி மாடர்ன் ரிவியூ என்ற பத்திக்கை 1917 இல் இவரது பல கேலிச்சித்திரங்களை வெளியிட்டது. 1917 முதல், இவரது நையாண்டி ஓவியங்கள் தொடர்ச்சியான அச்சிடப்பட்ட புத்தகங்களில் வெளிவந்தன. அவற்றில் பிளே ஆப் ஆப்போசைட்ஸ், ரியால்ம் ஆஃப் தி அப்சர்ட் மற்றும் ரிபார்ம் ஸ்கிரீம்ஸ் போன்றவை அடங்கும். [1] 1920 மற்றும் 1925க்கும் இடையில், ககனேந்திரநாத் நவீனத்துவ ஓவியத்தில் சோதனைகளை முன்னெடுத்தார். [2] பார்த்தா மிட்டர் என்பவர் அவரை "1940 களுக்கு முன்னர் கியூபிஸத்தின் மொழியையும் தொடரியலயையும் தனது ஓவியத்தில் பயன்படுத்திய ஒரே இந்திய ஓவியர்" என்று விவரிக்கிறார். [3] 1925 முதல், இவர் ஒரு சிக்கலான பிந்தைய கியூபிஸ்ட் பாணியை உருவாக்கினார். ககனேந்திரநாத் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். மேலும் லூயிஸ் கரோல், போதர் பகதூர் ('ஓட்டர் தி கிரேட்') முறையில் குழந்தைகள் புத்தகத்தையும் எழுதினார். [4] மேலும் காண்ககுறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia