கங்கவார்கங்கவார் எனப்படுபவர் கங்கவார் நாயுடு என்று அழைக்கபடுவர் மேலும் இவர்கள் போய நாயக்கர்களின் ஒரு பிரிவே ஆவர். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) எனும் வம்சாவளியான வால்மீகி முனிவரின் குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் என்றழைக்கபடும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,[1] மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் ஒரு பிரிவே முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கராவார். முடிராஜ் இனத்தினை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று அந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைக்கபடுவர். தமிழகத்தில் முத்திரையர் மற்றும் முத்தரையர்,முத்துராஜா என்றழைப்பர் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோலி (Koli) என்றும் அழைப்பர்.[2] இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் அறியப்படுகின்றது .[3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia