கங்கைப் புனித நீராடும் விழா
கங்கைப் புனித நீராடும் விழா (கங்கா புஷ்கரம்) கங்கை ஆற்றங்கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும். 12 நாள்கள்இவ்விழா 12 நாள்கள் நடைபெறும். குரு, மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும்போது இவ்விழா கொண்டாடப்படுகிறது. [1] இடங்கள்இவ்விழா காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் நடைபெறும். [2] ஹரித்வார் கங்கா புஷ்கரம்ஹரித்வார் கங்கா புஷ்கரம் 21 ஏப்ரல் 2023 முதல் நடைபெறவுள்ளது. சித்திரை 9ஆம் நாள் (22 ஏப்ரல் 2023) சனிக்கிழமை காலை 9.41 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குகுரு பகவான் பிரவேசிக்கிறார். மேஷ ராசிக்குரிய கங்கை நதிக்கரையில், ஹரித்வாரில் புஷ்கர விழா நடைபெறவுள்ளது. [3] பிற புஷ்கரங்கள்இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம் , கோதாவரி புஷ்கரம் , கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
|
Portal di Ensiklopedia Dunia