கடக்நாத்
கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கருங்கால் கோழி, கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது. இது "'காலாமசி"' எனவும் அழைக்கப்படுகிறது (கருஞ்சதைக் கோழி).[1] இந்தக் கோழி இனம் கருப்புநிற இறைச்சிக்கும், நல்ல சுவைக்கும் புகழ்பெற்றது.[2] இதன் இறைச்சியை உண்பதால் நல்ல வீரியம் உண்டாவதாக நம்பப்படுகிறது.[3] இதன் உடலில் மெலனின் நிறமி மிகுந்து காணப்படுவதால் இவ்வாறு காணப்படுகிறது.[1] இப்பறவை முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது. கருப்பு தோகையில் பச்சை நிறம் கலந்து வானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள் கொண்டதாகவும், இதன் இறைச்சி, எலும்புகள் போன்ற அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தக் கோழியின் தோல், அலகு, கால் விரல்கள், பாதம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். கொண்டை, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.[4] இதன் இறைச்சியில் உள்ளதாகக் கூறப்படும் மருத்துவ குணங்களால் இதன் இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது. இதனால் இந்தக் கோழிகளை அழிவில் இருந்து காக்க, மாநில அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு இந்த கோழியை வளர்க்க நிதி ஆதரவு மற்றும் உதவி பெறும் திட்டத்தை துவங்கியுள்ளது.[3] இக்கோழி இனம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும் மேச்சல் முறையிலும் வளர்க்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில்குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.[5] விமர்சனங்கள்
காட்சியகம்கடக்நாத் கோழிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia