கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்
கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (Kadambur R. Janarthanan) (பிறப்பு 22 அக்டோபர் 1929; இறப்பு 26 திசம்பர் 2020) இந்திய ஒன்றியத்தின் முன்னாள் மத்திய அமைச்சராகவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். வாழ்க்கை1929 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் கிராமத்தில் ரத்தினசாமி-மீனம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1] சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார். வேளாண்மை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தார். 1976 ஆம் ஆண்டில் அவசரகாலத்தில் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் நோயின் காரணமாக தீவிர அரசியலிருந்து விலகி ஓய்வில் இருந்தார். முதுமை காரணமாகவும், பக்கவாத நோயால் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் 26 திசம்பர் 2020 அன்று மரணமடைந்தார்.[2][3] அரசியலில்1984 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 9, 10, 12 ஆவது மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 முதல் 1999 வரை இரண்டாவது வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக பதவியில் இருந்தார். இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் (வருவாய், வங்கி மற்றும் காப்புறுதி) மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார். ஜனாநாதன் ஒரு சிறு கதை எழுத்தாளர் ஆவார். ஓடும் ரெயில் ஒருவன் என்ற இவரது சிறுகதை ஆனந்த விகடன் சிறுகதை போட்டியில் வென்றிபெற்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia