கடியநெடுவேட்டுவன்கடியநெடுவேட்டுவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். கோடைமலை அரசன். இவன் நாயுடன் வேட்டைக்குச் செல்லும் பழக்கம் உடையவன். இதனால் இவனைக் கடியநெடுவேட்டுவன் என்றே பெயரிட்டு வழங்கலாயினர். இவனது இயற்பெயர் நெடுவேட்டுவன் என்பதாகும். இதிலுள்ள கடிய என்பது இம்மன்னனின் ஊரினைக் குறிப்பிடுகிறது. இவ்வூராணது கோடைமலை எனப்படும் கொடைக்கானலின் அடிவாரத்தில் அமையப்பெற்ற ஒரு ஊர் ஆகும். இவன் தன்னை தஞ்சம் என தேடி வந்தோர்க்கு தன் தலையையும் கொடுக்க முன்வந்த வள்ளல் பரம்பரையினன். தன்னை எதிர்த்தவரை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை கொண்ட வீர மறவன்.[1] புறநானூற்றில் கடிய நெடுவேட்டுவன்பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார் முற்றிய திருவின் மூவர் ஆயினும், புறநானூற்றுப்பாடல் - 206
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia