கட்டளைக் கலிப்பாகட்டளைக் கலிப்பா யாப்பிலக்கணம் கூறும் செய்யுள் பாங்குகளில் ஒன்று. விருத்தம் போன்ற அமைப்பினை உடைய இந்தப் பாவானது நான்கு அடிகளைக் கொண்டிருக்கும். அந்த அடிகள் வரையறுத்த எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. நேரசையில் பாடல் தொடங்கினால் 11 எழுத்துக்களையும், நிரையசையில் பாடல் தொடங்கினால் 12 எழுத்துக்களையும் அடி வரையறையாகக் கொண்டிருக்கும். [1] பாடல் – எடுத்துக்காட்டுஆரசந் திரணத்து மண்டு மண்டி
ஊரசந் திரவிற் பாதிசென்றுமே
தீரசந் திரகாவியிடக் கயா
வீரசந் திரகிரி நகராதிபா
எழுத்துக்களை எண்ணும்போது மெய்யெழுத்தை விட்டுவிட்டு எண்ணுதல் வேண்டும். வேண்டுமேல் குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களையும் எண்ணிக்கையில் சேர்க்காமல் எண்ணுதல் வேண்டும். எழுத்து எண்ணும் பாங்கு - எடுத்துக்காட்டுஆ\1\ர\2\சந்\3\ தி\4\ர\5\ணத்\6\து\7\ மண்\8\டு\9\ மண்\10\டி\11\ (இது நேரசையில் தொடங்கிய அடி). நிரையசையில் தொடங்கிய பாடலை விக்கிமூலம் கடிகைமுத்துப் புலவர் பாடலில் காணலாம். அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia