கட்டு (குறிவிளையாட்டு)கட்டு என்னும் குறிவிளையாட்டு தொன்றுதொட்டு ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. குறி சொல்லும் வேலன் கட்டை வைத்துக் குறி சொன்னதாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1] தலைவன் நினைவால் மனம் மொழி செயல்களில் மாறுபட்டுக் காணப்படுவது இயல்பு. ஓலைக்கட்டில் நூல் செருகச் சொல்லிக் குறி சொல்லுவான். இது ஒரு வழி. கழங்குக் காய்களை இரண்டு இடங்களில் மாறிமாறிப் போடுவான். இதில் கழங்குக்காய் எந்தப்பக்கம் கட்டுகிறது எனப் பார்க்கப்படும். குறி என்பது உண்மையில் ஒரு விளையாட்டு. எதிர்காலத்தில் நிகழப்போவதை அதனால் கணிக்கமுடியாது. ஏதோ ஒரு மன நிம்மதிக்காக விளையாடப்படும் விளையாட்டு. இவற்றையும் பார்க்கஅடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia