கணியம்பாடி
கணியம்பாடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] வேலூர் மாவட்டத்தின் துணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்று கணியம்பாடி பகுதியில் அமைந்துள்ளது.[2] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 289.28 மீ. உயரத்தில், (12°48′20″N 79°08′10″E / 12.8056°N 79.1360°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கணியம்பாடி அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கணியம்பாடி ஊரின் மொத்த மக்கள்தொகை 9,597 பேர் ஆகும். இதில் 4,821 பேர் ஆண்கள் மற்றும் 4,776 பேர் பெண்கள் ஆவர்.[3] சமயம்இந்துக் கோயில்கடம்பவன வாசவி அம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று கணியம்பாடி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4] அரசியல்கணியம்பாடி பகுதியானது, ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia