கண்ணையன் தட்சிணாமூர்த்தி
கண்ணையன் தட்சிணாமூர்த்தி (Kannaiyan Daksnamurthy, பிறப்பு:29 மார்ச்சு 1962) என்பவர் சாகித்ய அக்காதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளராவார். இவர் மமங் தய் எழுதிய பிளாக் ஹில் நாவலின் மொழியாக்கமான கருங்குன்றம் நூலுக்கு 2023ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். [1] வாழ்க்கைக் குறிப்புஇன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் எனும் ஊரில் 1962 மார்ச்சு 29 அன்று சிங்காரவள்ளி - வீ. கண்ணையன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் தட்சிணாமூர்த்தி.[2][3] முதுகலைப் பொருளியல், முதுகலைத் தமிழ் மற்றும் இளங்கலை சட்டவியல் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். இந்திய செய்திப் பணி இளநிலை அலுவலராகவும், அகில இந்திய வானொலியில் நிலைய இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1995 முதல் மொழிபெயர்ப்புத் துறையில் செயல்பட்டுவருகிறார்.[2] மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் (நேஷனல் புக் டிரஸ்ட்) மொழிபெயர்ப்பாளராகப் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சாகித்திய அகாதமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவற்றுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புகள்இவர் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[4] அவர் மொழிபெயர்த்துள்ள நூல்களின் தலைப்புகள் வருமாறு:
விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia