கதிர்வீச்சு![]() கதிர்வீச்சு (ⓘ) (radiation) என்பது இயற்பியலில் ஆற்றலுள்ள அல்லது சக்தியுள்ள துகள்கள் அல்லது அலைகள் ஒரு ஊடகத்தினூடாகவோ ஒரு வெளியினூடாகவோ கடந்து செல்வதைக் குறிக்கும். கதிர்வீச்சில் முக்கியமாக அயனாக்கக் கதிர்வீச்சு, அயனாக்காக் கதிர்வீச்சு என இரண்டு வகையுண்டு. பொதுவாக நடைமுறையில் கதிர்வீச்சு எனக் குறிப்பிடும்போது, அது அயனாக்கக் கதிர்வீச்சை மட்டுமே குறிக்கின்றது. கண்டுபிடிப்புவில்லெம் ரோண்ட்கன் ஒரு குழாயையும், வெற்றிடம் பற்றியும் பரிசோதனை ஒன்றை நிகழ்த்திக் கொண்டு இருக்கும்போதே இவ்வகை கதிர்களை கண்டறிந்து, அவற்றிற்கு எக்ஸ் கதிர்கள் என்ற பெயரைக் கொடுத்தார். கதிர்வீச்சின் தன்மைகதிர் வீச்சானது ஆற்றல் மிக்கது ஆனால் கண்ணுக்குத் தெரியாதது. இது வெளியில் அலை வடிவத்தில் பரவக்கூடியது. பொதுவாக ஒரு கதிர்வீச்சுக்கான மூலத்திலிருந்து, ஆற்றலானது நேரான வரிசையில் கதிர்வீச்சாக எல்லாத் திசைகளிலும் பயணிக்கும். கதிர்வீச்சானது உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிப்பனவாக இருக்கும். கதிர் வீச்சின் அளவை பெக்கரல்(Becquerel-Bq) அளவுகளில் குறிப்பிடுகின்றனர். எவ்வளவு கெட்டியான அல்லது தடிமனான பொருட்களிலும் வேறு எந்த பொருட்களின் துணை எதும் இல்லாமல் செல்ல முடியும். பல்வேறு ஆண்டுகள் கழிந்தாலும் இத்தகைய கதிர்வீச்சுப் பொருட்கள் கதிர்களை உமிழும் இயல்புடையன. கதிர்வீச்சினால் பல்வேறு தனிமங்களின் மூலக்கூறுகள் அயனிகளாக மாற்றப்படுகிறது. சூரியக் கதிர்சூரியக் கதிரானது நீண்ட அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர் முதல் குறைந்த அலை நீளம் கொண்ட புற ஊதாக்கதிர் வரையிலான அலைநீளக் கதிர்வீச்சுகளைக் கொண்டது. இவை தீங்கு விளைவிக்கககூடியது. புற ஊதாக்கதிர் வீச்சுக்கு அப்பால் உள்ளது அயனியாக்கக் கதிர்வீச்சாகும். இது பொருண்மைக்கு சேதத்தை விளைவிக்கக் கூடியது. குறிப்பாக உயிர்த் திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஒரு குறிப்பிட்ட அளவு நிலைக்குட்பட்ட அயனியாக்கக் கதிர் வீச்சில் உயிர்வாழ்வனவற்றின் படிவளர்ச்சி ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. கதிர் வீச்சின் வகைகள்சுற்றுச்சுழலில் நிகழும் கதிர்வீச்சுகளை
மேலும் கதிர்வீச்சை
இயற்கை கதிர்வீச்சு
நாம் வாழும் இப்புவிச் சூழலில் தவிர்க்க இயலாத இயற்கையான கதிர்வீச்சும் உள்ளது. இதற்கு பின்நில கதிர்வீச்சு (Background radiation) என்றும் பெயர். கற்பாறைகள்(Granite) மற்றும் உலோகத் தாதுகள் நிறைந்த தரைப் பரப்பில் வாழும் மக்கள் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை விட அதிகமான அளவி நிலக் கதிர்வீச்சுக்கு ஆட்படுகின்றனர். இதே போல் மிக உயர்வான பகுதிகளில் வேலை செய்வோர் மற்றும் வசிப்போர் ஆகியோர் காஸ்மிக் கதிர்வீச்சுக்கு ஆட்படுகின்றனர். பொதுவாக நாம் அனைவருமே புவியின் மேல் ஓட்டிலிருந்து(Crust) வெளியாகும் ராடான் வாயுவின் பாதிப்பிற்கு ஆட்படுகிறோம். இது நாம் சுவாசிக்கும் காற்றிலும் கலந்துள்ளது. யுரேனியம் போன்ற நிலையற்ற தனமை கொண்ட ஐசோடோப்புகள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டவை. ஒரு ஐசொடோப்பு சிதைவுறும் போது அது தான் பெற்றுள்ள அதிகப்படியான ஆற்றலைக் காமாக் கதிர்களாகவும், ஆல்பா கதிர்கள் மற்றும் பீட்டாக் கதிர்வீச்சாகவும் வெளியிடுகிறது. மேலும் ஐசோடோப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது காமாக் கதிர்வீச்சை வெளியிடும் மூலமாகச் செயல்படுகிறது. செயற்கை கதிர்வீச்சுசெயற்கை கதிர்வீச்சு மனிதனால் உண்டாக்கப்படுவதுடன் சுற்றுச்சுழலில் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியும் வருகின்றன.
அணுக்கரு பிளவினால் ஆற்றல் வெளிப்பட்டால் அதனை அணுகுண்டு என்பர். அணுகுண்டு தயாரிக்க யுரேனியம் புளுட்டோனியம் போன்ற கதிரியக்க ஒரிமங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு இணைவு ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கவும், அணுக்கரு பிளவு அணுகுண்டு தயாரிக்கவும் பயன்படுகிறது. உலகில் முதல் அணு ஆயுத பரிசோதனை அமெரிக்காவில் உள்ள அலமோ கார்டாவில் 1945 ஜூலை 16 இல் நடைபெற்றது. இதில் புளுட்டோனியம் 239 பயன்படுத்தப்பட்டது.
அணு ஆற்றலை அணுகுண்டு தயாரித்தல் என்னும் அழிவுப்பணிக்கு மட்டும் அல்லாமல் மின்சாரம் தயாரிக்கலாம் என்னும் நற்கருத்தின் அடிப்படையில் அணு மின்நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது. அணு ஆற்றலைக் கட்டுப்படுத்திப் வெப்ப ஆற்றலாக பெற்று பின்னேர் அதைப் பயன்படுத்தி மின் ஆற்றலாக கிடைக்கிறது.. பொதுவாக அணுமின் நிலையங்களில் இருந்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளிவருவது இல்லை எனினும் அணு உலைகளில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்கள் கதிரியக்கத்தைப் பெற்றுள்ளன. இக்கழிவுப் பொருட்களில் ரேடியம், தோரியம் மற்றும் புளுட்டோனியம் ஆகிய கதிரியக்க தனிமங்கள் உள்ளன. இவை புவி சுற்றுச்சுழலை மாசுபடுத்துவவை.
எக்ஸ் கதிர்களை ராண்ட்ஜன் என்பவர் 1895 - இல் கண்டறிந்தார். குறுகிய அளவைக் கொண்ட இக்கதிர்கள் மிக விரைவாக பாய்ந்து செல்லும் இயல்பையும், எல்லாப் பொருட்களிலும் உடுருவும் இயல்பையும் உடையன. உடல் உறுப்புகளில் தோன்றும் நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிய இக்கதிர்விச்சு பயன்படுகிறது. ஆனால் தொடர்ந்து இக்கதிர் வீச்சுக்கு உட்படும் நோயர் மரபியல் பாதிப்படைகின்றனர்.
மேரி க்யுரி, பியூரி கியூரி ஆகியோர் கண்டு பிடித்த தனிமம் இது ஆகும். இதிலிருந்து வெளிவரும் ஆல்பா கதிரியக்க துகள்கள் கற்று மண்டலத் தூய்மைக்கேட்டுக்கு காரணமாகிறது. ஒரு சில இயற்கை மற்றும் செயற்கைப் பொருள்களின் கதிர்வீச்சு அளவு
அயனியாக்கக் (அயனாக்க) கதிர்வீச்சு (Ionizing radiation)அயனாக்க கதிர்வீச்சானது, அணுவை அல்லது மூலக்கூற்றை அயனாக்கமடையச் செய்யக்கூடிய அளவு ஆற்றல் உடையதாகும். அதாவது அணு அல்லது மூலக்கூற்றிலிருந்து இலத்திரன்களை இடம்பெயர்க்கும் வல்லமை கொண்டதாகும். எக்சு கதிர்கள், காமாக் கதிர்கள், ஆல்பாக் கதிர்கள் மற்றும் பீட்டாத்துகள்கள் ஆகியன் பொருண்மையில் அயனியாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. இதற்கு அயனியாக்கக் கதிர்வீச்சு என்று பெயர். உயிரியல் அமைப்புகளில் அயனியாக்கமான மூலக்கூறுகளை இது உருமாற்றம் செய்யக்கூடியது. உயிர்-இரசாயண மூலக்கூறுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது செல்களில் சிதைவையும் இறப்பையும் ஏற்படுத்தும். இரண்டு முக்கிய அயனியாக்கக் கதிர்வீச்சுகளாவன.
துகள்கதிர்வீச்சு( corpuscular or particulate radiation)துகள் கதிர் வீச்சில் மின்னூட்டத் துகள்களுடன் ஆல்பா, பீட்டாத் துகள் மற்ரும் மின்னூட்டமற்ற நியூட்ரான் உமிழ்வுகள் ஆகியன் அடங்கும். சில மின்னூட்டத் துகள்கள் செயற்கையான துகள் முடுக்கிகளினால் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். மின்காந்தக் கதிர்வீச்சு (Electromagnetic radiation)மின்காந்தக் கதிர்வீச்சு மாலையானது மிக அகன்ற நெடுக்க உயர் ஆற்றல் போட்டான்ளைக் கொண்டதாகும் இதில் புற ஊதா ஒளி, கண்ணுக்குப்புலனாகும் ஒளி, அகச்சிவப்பு (வெப்பம்) சுண்ணலை, எக்சுகதிர்கள், மற்றும் காமாக் கதிர்கள் போன்ற அணுக்கதிர்வீச்சுகளை உள்ளடக்கியது. இந்தக் கதிர் வீச்சு ஒளியின் வேகத்தில் அதாவது 1 வினாடியில் 3,00,000 கி. மீ பயணிக்கக்கூடியது. எக்சு கதிர்களும் காமாக்கதிர்களும் குறைந்த அலை நீளமும் உயர் ஆற்றலும் கொண்டவை. அயனியாக்கக் கதிர்வீச்சிற்கான அலகுமனிதர்களால் கதிர்வீச்சை நேரடியாக கண்டுணர முடியாது இருப்பினும் இன்று கதிர்வீச்சைக் கண்டறியவும் அளக்கவும் நம்பகத்தன்மையும் துல்லியமானதுமான பல கருவி அமைப்புகள் உள்ளன. கதிர்வீச்சை அளப்பதற்கான புதிய அலகுகளாக இன்று கிரே(Gray-Gy) சீவெர்ட் (Sievert-Sv) ஆகியன பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிரே என்பது ஒரு கி.கி. நிறையில் படிந்துள்ல ஒரு ஜூல் ஆகும். பல்வேறு வகையான கதிர்வீச்சிகளின் சம அளவு பாதிப்பு சமமான உயிரியல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே கதிர்வீச்சானது பாதிப்பு அளவைப் பொருத்து சீவெர்ட் அளவில் கூறப்படுகிறது. அத்துடன் கதிர் வீச்சு வகைகளைப் பொருத்தில்லாமல் 1 சீவெர்ட் கதிர்வீச்சானது அளவான உயிரியல் பாதிப்பைத் தரக் கூடியதாகும். அபாய அளவுஇயற்கையாக இருக்கும் கதிர்வீச்சு அளவைக் காட்டிலும் மிக அதிக பாதிப்பு கொண்ட அயனியாக்க கதிர்வீச்சு புற்றுநோய் மற்றும் லெக்குமியா அளவைச் சில காலத்திற்குப் பின் உயர்த்தக் கூடியது.[2] இதனால் மரபணுச்சிதைவு ஏற்படுகிறது. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எதிர்காலச் சந்ததிக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியது. கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பின் அளவானது , கதிவீச்சின் தன்மை, உடலின் எந்தப் பகுதி பாதிப்படைகிறது, வயது மற்றும் உடல் நலம் ஆகியவற்றைச் சார்ந்தது. நமது உடலமைப்பானது கதிர்வீச்சு எதிர்ப்பு ஆற்றலைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கதிர் வீச்சுக்கு ஆட்பட்டால் உடல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவது பொதுவாக இயற்கையாகக் காணப்படும் கதிர்வீச்சு மூலத்தினாலேயே ஆகும். இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் குறிப்பிடத்தக்க உயர் அளவு கதிர்வீச்சுக்கு ஆட்படுகிறார்கள். இந்த இயற்கையான கதிர்வீச்சு பாதிப்பு இந்தியா, ஈரான், பிரேசில் மற்ரும் ஐரோப்பா ஆகிய இடங்களில் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நித இயற்கையான கதிர்வீச்சு பாதிப்பு உடலில் புற்று நோயையோ வேறு பாதிப்புகளையோ ஏற்படுத்தியதாக ஆதாரங்கள் இல்லை. பொதுவக மனிதர்களை பாதிக்கும் கதிர் வீச்சில் இயற்கையான கதிர்வீச்சு 88 விழுக்காடும் மீதமுள்ள 12 விழுக்காடு செயற்கைக் கதிர்வீச்சாலும் ஏற்படுவதாகும் ஆனால் இந்த இரண்டின் தன்மையும் பாதிப்பும் ஒரே மாதிரியானவையாகும். கதிர்வீச்சு வகை மற்றும் பாதிப்பு விழுக்காடு
பன்னாட்டுக் கதிரியல் காப்பு கழகம் (International Commission on Radiological Protection -ICRP ) இயற்கை கதிர்வீச்சுடன் எந்த அளவு கதிர்வீச்சு அளவுக்கு ஆட்படலாம் எனப் பின்வருமாறு வரையறை செய்துள்ளது.
இயற்கையாக உள்ள கதிர்வீச்சுப் பொருள்கள்
பொருள்கள் மற்றும் அதில் உள்ள கதிர் வீச்சுத் தனிமங்கள்
உயிரணுவும் கதிர்வீச்சும்அயனியாக்கும் கதிர்கள் உடல்நலனைப் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. உயிரணுக்களில் தோன்றும் விளைவே பல உயிரியல் விளைவுகளுக்குக் காரணமாகும்.400 கிரே அளவு கதிர்வீச்சு வெப்பநிலையினை ஒரு செல்சியசு கூட்டத் தேவைப்படுகிறது. இத்தகு வெப்ப விளைவே உயிரியல் விளைவுகளுக்கு காரணம் என்பதனை ஏற்க முடியாது. இதனையும் விட குறைந்த கதிர் ஏற்பளவு கூட வளர்சிதை மாற்றங்களை, இறப்பினைத் தோற்றுவிக்கக் காண்கிறோம். உயிரணுக்களில் காணப்படும் மிகவும் முக்கியப் பகுதி டி.என்.ஏ.. இதில் ஏற்படும் முறிவு அல்லது பிறழ்ச்சி அடுத்தடுத்த உயிரணுப் பகுப்பின் போது எடுத்துச் செல்லப்படுவதால் சேதமுற்ற உயிரணுக்கள் பெருகுகின்றன. இது புற்று வளரக் காரணமாகலாம். உயிரணுக்களின் இறப்பிற்குக் காரணமாகும் நிலையில் அது புற்று நோயினைக் குணப்படுத்தவும் உதவும். இதிலிருந்து உயிரணுவில் கதிர் வீச்சின் தாக்கம் தெரிகிறது. ஆதாரம்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia