கன்சிராம்
கன்சிராம் (Kanshi Ram) (15 மார்ச் 1934 – 9 அக்டோபர் 2006) இந்திய அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியுமாக இருந்தவர். தலித் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசியல் ரீதியாகத் தலித்துகளை ஓன்று திரட்டப் பாடுபட்டவர். கன்சிராம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 1984 ஆம் ஆண்டு, அம்பேத்கர் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கட்சியான பகுசன் சமாச் கட்சியினைத் துவங்கினார். இவருடைய வழிவந்த மாயாவதி நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்சிராம், தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார். கன்சிராம் அம்பேத்கரின் ஐம்பதாவது நினைவு நாளான அக்டோபர் 14 ஆம் நாளன்று சமயத்தைத் தழுவ இருந்தார் ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அக்டோபர் 9 அன்று இறந்தார்.[2] ஆனால் அவரின் இறுதிச் சடங்குகள் பௌத்த சமயத்தின் படி நடந்தன. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia