கருநாடக சனதா கட்சி
கர்நாடக ஜனதா பக்ஷா (Karnataka Janata Paksha, KJP) அல்லது கருநாடக சனதா கட்சி தென்னிந்திய மாநிலம் கர்நாடகத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இதனை பத்மநாப பிரசன்னா என்பவர் துவக்கினார். இருப்பினும் 2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கட்சியில் முன்னாள் கர்நாடக முதல்வர் பி. எஸ். எதியூரப்பா இணைந்து இதன் தலைமையை ஏற்றபிறகே பலராலும் அறியப்பட்டது. எதியூரப்பா நவம்பர் 30, 2012இல் தமது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினராக இருப்பதிலிருந்தும் விலகினார். திசம்பர் 9, 2012 அன்று கருநாடக சனதா கட்சியின் அவேரி மாநாட்டின்போது அக்கட்சியில் இணைந்தார். 2013ஆம் ஆண்டில் கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இக்கட்சியைத் தலைமையேற்று வழிநடத்துவார்.[1][2][3][4] 2013 மார்ச்சு மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முதன்முறையாகப் போட்டியிட்டு இக்கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதபோதும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு பெரும் பங்காற்றியது. [5] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia