கருவூர்த் தேவர்![]() கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர். இவர் கி.பி.10ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் ஆவார்.[1] திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவரின் உருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் இருக்கிறது.[2] கருவூர்த் தேவர் கருவூரில் தோன்றியவராவார். இவர் ஒரு சித்தர் ஆவார். தஞ்சைத் சோழமன்னன் முதலாம் ராஜராஜனின் குருவாகவும் விளங்கினார். தஞ்சைப் பெருவுடையார் கோயில் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் என்று கருதப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார்.[3][4]
ஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக் அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில் கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia