கருவை அந்தாதிகள்கருவை அந்தாதி நூல்கள் மூன்று.[1] இங்குக் கருவை என்பது கரிவலம்வந்த நல்லூரைக் குறிக்கும். [2] வரதுங்க ராமன் என்னும் பாண்டிய மன்னன் கொக்கோகம், பிரமோத்தர காண்டம் என்னும் நூல்களையும் கருவை என்னும் கரிவலம்வந்த நல்லூர் சிவபெருமான்மீது மூன்று நூல்களையும் பாடியுள்ளார். காலம் 16 ஆம் நூற்றாண்டு. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதிபத்துப் பாடல்களின் பத்து அடுக்குகளைக் கொண்ட நூல் பதிற்றுப்பத்து எனப்படும். சங்கநூல்களில் உள்ள பதிற்றுப்பத்து 10 புலவர்களால் பாடப்பட்ட பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல். இதில் நான்காம் பத்தில் உள்ள 10 பாடல்களும் அந்தாதியாக வருகின்றன. [3] திருவாசகத்தில் உள்ள திருச்சதகம் [4] பத்துப் பத்தாக அடுக்கப்படாமல் பத்துப்பத்து (நூறு) என்ற முறையில் அமைந்துள்ள முன்னோடி நூல். இதில் 100 பாடல்களும் அந்தாதித் தொடையில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் அந்தாதியாகத் தொகுக்கப்பட்ட நூலே இந்தக் கருவை அந்தாதி நூல். இதனைக் 'குட்டித் திருவாசகம்' எனப் போற்றி வருகின்றனர். இதில் உள்ள சுவை மிக்க பாடல்கள் மூன்று எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. 1
மா கூவிளம் கூவிளம் கூவிளம் முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்! 2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும். (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(மா விளம் விளம் விளம் மா) (விளத்தின் இடத்தில் மாங்காய்ச்சீர் வருவதும் உண்டு)
திருக்கருவைக் கலித்துறை அந்தாதிவிநாயகரைப் போற்றும் காப்புச் செய்யுள் ஒன்றும், கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் நூறும் கொண்ட நூல் இது. பத்திச் சுவை சொட்டும் பாடல்களைக் கொண்ட இந்த நூலிலிருந்து எடுத்துக் காட்டுக்கு ஒரு பாடல்;
திருக்கருவை வெண்பா அந்தாதிகாப்புச் செய்யுள் ஒன்று, மற்றும் அந்தாதியாய் அமைந்த 100 வெண்பாக்கள் என அமைந்துள்ள நூல் இது. எல்லாப் பாடல்களிலும் பத்திப் பெருக்கெடுத்த ஓட்டம். எடுத்துக்காட்டுப் பாடல் ஒன்று.
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia