கர்டியசு மறுசீராக்கல் வினை அல்லது கர்டியசு வினை அல்லது கர்டியசு சிதைத்தல் வினை ( Curtius rearrangement ) முதன் முதலில் தியோடர் கர்டியசால் வரையறுக்கப்பட்டது. ஓர் அசைல் அசைட்டுசமசயனேட்டாக மறுசீராக்கம் அடையும் வேதிவினையே கர்டியசு மறுசீராக்கல் வினை எனப்படுகிறது [1][2][3][4]. இவ்வினை தொடர்பாக பல விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கர்டியசு மறுசீராக்கல் வினை இரண்டு படிநிலைகளில் நிகழ்வதாக நம்பப்படுகிறது. நைட்ரசன் வாயுவை இழந்து அசைல்நைட்ரீன் உருவாவது முதல் படிநிலையில் நிகழ்கிறது. இரண்டாவது படிநிலையில் அசைல் நைட்ரீன்களில் உள்ள ஆல்கைல் தொகுதிகள் இடபெயர்ச்சியாவதன் மூலமாக மறுசீரமைப்பு அடைந்து தேவையான சமசயனேட்டு உருவாகிறது. இருப்பினும் இவ்விரு படிநிலைகளும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன என்று நடைமுறையில் கிடைத்துள்ள சான்றுகள் குறிப்பிடுகின்றன. தனிநிலை நைட்ரீன் இடைநிலைகள் எதுவும் இங்கு உருவாவதில்லை[12]
வீச்செல்லை
α-சயனோஎசுத்தரை ஓர் அமினோஅமிலமாக மாற்றும் செயலில் கர்டியசு மறுசீராக்கல் வினையின் ஒரு படிநிலை நிகழ்கிறது. இம்மாறுபட்ட வேதிவினை தாராசுகை சிதைத்தல் வினை எனப்படுகிறது[13]