களுத்துறை வித்தியாலயம்
களுத்துறை வித்தியாலயம் (Kalutara Vidyalaya) மேல் மாகாணத்தில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்றாகும். . தேசியப் பாடசாலையான இப் பாடசாலை களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை நகரில் அமைந்துள்ளது. சனவரி 13 1941 இல் இப் பாடசாலை சிரில் டி சொய்சா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்பு பெண்கள் பாடசாலை என்றும் ஆண்கள் பாடசாலை என்றும் தனித்தனியாக மாற்றம் பெற்றது. பௌத்த பாடசாலையான இப்பாடசாலை கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப் பாடசாலையில் கற்ற பல மாணவர்கள் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்க உயர் பதவி வகிக்கும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர். இப் பாடசாலையில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். வெளியிணைப்புக்கள்
|
Portal di Ensiklopedia Dunia