கள்ளச்சிரிப்பு
கள்ளச்சிரிப்பு என்பது 2018 இல் வெளிவந்த இந்திய தமிழ் மொழி த்ரில்லர் வலை தொலைக்காட்சி தொடர் ஆகும். இதனை ஜீ 5, வீடியோ ஆன் டிமாண்ட் சேவையில் வழங்கியது.[1] இந்த வலைத் தொடரை ரோஹித் நந்தகுமார் இயக்கியுள்ளார் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸின் கீழ் தயாரித்தார்.[2] இது கார்த்திக் சுப்பராஜின் முதல் வலைத் தொடர் தயாரிப்பாகும்.இதனை ஜீ 5 இல் 23 ஜூலை 2018 அன்று வெளியிடப்பட்டது, இறுதியில் 30 ஜூலை 2018 அன்று 8 அத்தியாயங்களுடன் முடிந்தது. இதில் அம்ருதா சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் விகாஸ், விக்னேஷ் சண்முகம், ராஜலட்சுமி, உமா, மகேஸ்வரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.[3] இந்த வலைத் தொடர் அமெரிக்கா மாப்பிள்ளைக்குப் பிறகு ஜீ 5 நெட்வொர்க்கால் தொடங்கப்பட்ட இரண்டாவது வலைத் தொடராகும்.[4] பெண் கதாப்பாத்திரங்களுக்கு தரப்படுகின்ற முக்கியத்துவதால் வலைத் தொடர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[5][6] தொடரில் கருப்பொருளாக காமம், பாலியல், ஆபாச படங்கள், எல்ஜிபிடி, கருக்கலைப்பு மற்றும் திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள் ஆகியவையும், காதலும் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.[7][8] கதைஇந்தத் தொடர் 24 வயதான மகதியை பெற்றோர்கள் வற்புருத்தி திருமணத்திற்கு உட்படுத்துவதிலிருந்து தொடங்குகிறது. புதிதாக திருமணமான மகாதி கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்செயலாக தனது கணவரை தற்காப்புக்காக குத்திக் கொலை செய்கிறார். பிறகு தன்னுடைய காதலனுக்கு நிகழ்ந்ததை தெரிவிக்கிறார். இந்த திருமணத்தில் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட கதாப்பாத்திரங்களுடன் இத்தொடர் நகர்கிறது. இந்த தொடரில் ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு இடையிலான காதல் கதையும் இடம்பெற்றது.[9] நடிகர்கள்
தயாரிப்புரோஹித் நந்தகுமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருக்கு இடையில் ஒரு வலைத் தொடரை உருவாக்கும் யோசனை அவியால் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியான பின்னர் முடிவானது.[10] அவியல் திரைப்படத்தின் ஆறில் ஒரு சிறுகதையை நந்தக்குமார் எழுதி இயக்கியிருந்தார். அதனால் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு பேனர் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸின் கீழ் இத்தொடரை தயாரித்தார். .[11][12] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia