வேலன் (சாமியாடி) உருட்டும் கழங்கு குறிசொல்ல உதவும்.
மகளிர் கழங்கு
கழங்கும் அளவும்
முத்துகள், முத்து அளவில் மரக்கட்டையில் கடைந்தெடுத்த உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை மகளிர் விளையாட்டில் கழங்காகப் பயன்படுத்தப்பட்டன.
மகளிர் ஆடிய முறை
மழை பெய்யும்போது உடன் இறங்கும் அத்திக்கட்டி, ஆலங்கட்டி என்னும் மழைப்பனிக்கட்டி இறங்குவது போல மகளிர் விளையாட்டின்போது கழங்குகள் இறங்கின. அவற்றைத் தூக்கிப்போட்டுப் பிடித்து மகளிர் விளையாடினர்.
கழங்காட்டத்துக்கும் பந்தாட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு
சங்க காலத்தில் மகளிர் விளையாடிய பந்தாட்டத்தில் பந்துகள் தரையில் விழாமல் மேலே தட்டிவிட்டு (juggling) விளையாடப்படும். கழங்கு தரையில் பரப்பி, கையால் பற்றித் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடப்படும்.
மிக்கத்திறனுடனும், நேரத்தைக் கணக்கில் கொண்டும், கையால் விளையாடப்படும் விளையாட்டு (juggling)
கழங்காடிய இடங்கள்
சேரநாட்டுக்கருவூரை அடுத்த தண்ணான்பொருநை ஆற்றுமணல், தொண்டைநாட்டு நீர்ப்பெயற்று துறைமுக மணல்வெளி,பாண்டியநாட்டுக் கடலோர மணல்வெளி, ஓலைக்குடிசைகளின் முற்றத்து மணல்பரப்பு முதலான இடங்களில் கழங்கு விளையாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
கழங்கு விளையாட்டு பற்றிய செய்திகள்
கருவூரை அடுத்திருக்கும் ஆன்பொருநை (அமராவதி) ஆற்று மணலில் மகளிர் பொன் செய் கழங்கினால் தெற்றி விளையாடி மகிழ்ந்தனர். [1]
நீர்ப்பெயற்று என்பது ஒரு துறைமுகப் பட்டினம். அப்பட்டினத்து மாடங்களில் பந்து விளையாடிய மகளிர் மணல்வெளிக்கு வந்து கழங்கு ஆடினர். [2]
பாண்டிய நாட்டில் கடற்கரை மணலில் மகளிர் முத்துகளைக் கழங்காகப் பயன்படுத்தி, கூச்சலிட்டுக் கும்மாளம் போட்டுக்கொண்டு கழங்கு ஆடினர். [3]
கழங்காடும் திறமையில் காதல் அரும்புவதும் உண்டு. [14]
கூரை வீட்டின் முன்புறம் ஈந்துப்புதர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு மகளிர் கழங்கு ஆடினர். [15]
செல்வச் சிறுமியர் கழங்காடுவர். போரின்போது கழங்காடு களம் அழிக்கப்படும். [16]
வேட்டுவர் தம் தெய்வம் கொற்றவைக்குப் படையல் செய்யும்போது கிளி, மயில் ஆகியவற்றுடன் தம் விளையாட்டுப் பொருள்களான பந்து, கழங்கு போன்றவற்றையும் சேர்த்துப் படையல் செய்தனர். [17]
வட்டக்கழங்குக் காய்கள் நெல்லிக்காய் போல இருக்கும். இது வேலன் விளையாடிய கழங்கின் அளவு. [19]
போருக்குப் புறப்படுவதற்கு முன் கழங்கு உருட்டிக் கணிக்கப்பட்ட முடிவை களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அழித்து வெற்றி காண்பானாம். [20]
இக்காலப் பாண்டிக்கல்
கழிச்சிக்கொட்டைகளைக் கழங்கு என்றனர். நாளடைவில் கழிச்சிக்கொட்டை அளவிலான மணியாங்கற்களையும் கழங்கு விளையாடப் பயன்படுத்தினர். இக்காலத்தில் இந்த விளையாட்டு பாண்டிக்கல், ஒண்ணாங்கல் இரண்டாங்கல் என்னும் பெயர்களுடன் விளையாடப்பட்டு வருகிறது.