கவனகம்

கவனகம் என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களில் தனது கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலை ஆகும். இதனை வடமொழியில் அவதானம் என்பர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர் கவனகர் எனப்படுகிறார். இவரை வடமொழியில் அவதானி என்பர்.[1]

வகை

ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கவனகம் வகைப்படும். அவை வருமாறு:

செயலின் எண்ணிக்கை தமிழ்ப் பெயர் வடமொழிப் பெயர் கலைஞரின் தமிழ்ப் பெயர் கலைஞரின் வடமொழிப் பெயர்
நான்கு நாற்கவனகம் சதுரவதானம் நாற்கவனகர் சதுரவதானி
எட்டு எண்கவனகம் அட்டாவதானம் எண்கவனகர் அட்டாவதானி
பத்து பத்துக் கவனகம் தசவதானம் பத்துக் கவனகர் தசாவதானி
பதினாறு பதினாறு கவனகம் சோடகவதானம் பதினாறு கவனகர் சோடக்கவதானி
முப்பத்திரண்டு முப்பத்திரண்டு கவனகம் துவாத்ரீம் தசாவதானம் முப்பதிதிரண்டு கவனகர் துவாத்ரீம் தசாவதாணி
நூறு நூறு கவனகம் சத அவதானம் நூற்றுக் கவனகர் சதாவதானி

மேற்கோள்கள்

  1. சா.ஜெ.முகில் தங்கம் (17 பெப்ரவரி 2017). "கவனகன் !". கட்டுரை. தி இந்து. Retrieved 18 பெப்ரவரி 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya