கவனக்குலைவு (உளவியல்)கவனக் குலைவு அல்லது கவனச்சிதறல் (Distraction) என்பது ஒரு தனிநபரின் அல்லது குழுவின் கவனத்தை விரும்பிய இடத்திலிருந்து திசைதிருப்புவதன் மூலம் விரும்பிய தகவலின் வரவேற்பைத் தடுக்கும் அல்லது குறைக்கும் செயல்முறையாகும். கவனம் செலுத்தும் திறன் இல்லாமை; கவனம் செலுத்தும் பொருளில் ஆர்வமின்மை; அல்லது கவனம் செலுத்தும் பொருளை விட வேறு ஏதேனும் பொருளில் மிகுந்த தீவிரம், புதுமை அல்லது கவர்ச்சி ஆகியன கவனச் சிதறல் ஏற்படக் காரணமாக அமைகின்றன. கவனச்சிதறல்கள் வெளிப்புற மூலங்கள் மற்றும் உள் மூலங்கள் இரண்டிலிருந்தும் ஏற்படுகின்றன. வெளிப்புற கவனச்சிதறல்களில் காட்சி தூண்டுதல்கள், சமூக தொடர்புகள், இசை, குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற காரணிகள் அடங்கும். பசி, சோர்வு, நோய், கவலை, பகல் கனவு போன்ற உள் கவனச்சிதறல்களாகும். வெளிப்புற மற்றும் உள் கவனச்சிதறல்கள் கவனம் தடைபடுவதில் பங்களிக்கின்றன.[1] சான்றுகள்
வெளியிணைப்புகள்
![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கவனக்குலைவு (உளவியல்) |
Portal di Ensiklopedia Dunia