காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்![]() காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம் 1813-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகில் ஒரு நாற்சந்தியில் உள்ள கோதவுலியா (குதிரைகள் நிறுத்துமிடம்) எனும் பகுதியில் சுசீலா திரையரங்கத்திற்குப் பின்னால் காசி நாட்டுக்கோட்டைச் சத்திரம் அமைந்துள்ளது. வாடகை வண்டி ஓட்டிகளிடம் நாட் கோட் சத்தர் என்று கூறினால் இச்சத்திரத்திற்கு கொண்டு சேர்ப்பார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ஒரு மடம் போன்ற அமைப்பாகும். இங்கு ஒரு சிவலிங்கம் கோயில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து காசிக்குச் செல்பவர்களுக்கு மட்டும் இச்சத்திரத்தில் தங்குமிடம், மூன்றுவேளை உணவு வசதிகளுக்கு சிறு அளவில் கட்டணம் பெறப்படுகிறது. மேலும் கட்டணம் இன்றி தங்கும் பெரிய அறைகளும் உள்ளது. இச்சத்திரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூக அமைப்பினரால் பராமரிக்கப்படுகிறது. சிறப்பு
சத்திரத்தின் நிலங்கள்
வட இந்தியாவில் உள்ள பிற நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரங்கள்வட இந்தியாவில் முக்கிய நகரங்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதிகள் உள்ளது.[2]
தென்னிந்தியாவில் நகரத்தார் விடுதிகள்தென்னிந்தியாவில் காரைக்குடி, தேவகோட்டை, மதுரை, சிதம்பரம், திருவண்னாமலை, காஞ்சிபுரம், திருவெற்றியூர் உள்ளிட்ட பல கோயில் நகரங்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதிகள் உள்ளன.[4] மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia