காடு வளர்ப்பு![]() ஒருபோதும் காடாக இருந்திராத நிலத்தில் விதைகளை விதைப்பதோ அல்லது மரங்களை நடுவதோ காடு வளர்ப்பு ஆகும். மீண்டும் காடாக்குதல் என்பது முற்றிலுமாக அழிந்து போன, உதாரணமாக மரங்கள் வெட்டப்பட்ட காட்டை மீண்டும் உருவாக்குவதாகும். நூறாண்டு காலமாக பல்வேறு நாடுகள் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்கொண்டு வருகின்றன. காடுகளை மீண்டும் உருவாக்கவும் உயிரியற் பல்வகைமை வாழ்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதில் உதவவும் அரசாங்கங்களும் அரசு சாரா அமைப்புகளும் காடு வளர்ப்பு திட்டங்களில் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றன. (இங்கிலாந்தில் காடு வளர்ப்பு என்பது நிலத்தை சட்ட ரீதியாக அரசு காடாக மாற்றுவதைக் குறிக்கப்படும்.) காடுகளின் வளத்தைப் பெருக்க நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
இவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் காடு வளர்ப்பது என்ற நேர்மறை வினையாகும். வளர்வதற்கு தகுதியற்றதாய் தரிசாகி விடுகிறது. கால்நடைகளால், குறிப்பாக ஆடு, மாடு,குதிரை போன்ற தாவரங்களை உண்ணும் விலங்குகளால் அளவுக்கு அதிகமாய் மேய்ச்சலுக்கு ஆளாகுதல், காட்டு வளங்களை அளவுக்கு அதிகமாய் சூறையாடல் உள்பட ஏனைய காரணிகள் காரணமாக காடுகள் அளிக்கப்படுவது நடைபெறுகிறது. இவற்றின் காரணமாக பாலைநிலமாதல் உலக பிராந்தியங்களில் காடு வளர்ப்புபிரேசில்கடந்த சில நுற்றண்டுகளாக அமேசானில் தொடர்ந்து நடைபெற்று வரும்[1] தீவிரமான காடு அழிப்பின் விகிதச்சாரம் சிறிய அளவிலான காடு வளர்ப்பு முயற்சிகளின் விகிதத்தை விட மிகவும் அதிகமாகும். தேச அளவிலான அமேசான் மழை காடுகளை எண்ணிப்பார்க்கையில் இந்த கணக்கு காடு வளர்ப்பு முறையை முக்கியத்துவம் அற்றவையாகிவிடுகின்றன.[2] சீனாசீனா வரலாற்று ரீதியாக தான் பெற்று இருந்த காட்டுப்பகுதிகளில் பெரும்பாலனவற்றை முழுவதுமாக அழித்து விட்டிருக்கிறது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவுக்கும் அதிகமாக மரம் வெட்டுவது நடைபெறுவதால், மரம் வெட்டுதல் அதன் வரலாற்று மட்டத்திற்கும் மிகக் கீழே வீழுகின்ற கட்டத்தை சீனா அடைந்து விட்டது.[3] அது போக காடுகளை உருவாக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக சில குறி இலக்குகளை அதாவது 80 ஆண்டுகளை குறி இலக்காக நிர்ணயித்திருந்தாலும் 2008 ம் ஆண்டு வரையில் சொல்லும்படியாக எதையும் சாதித்திருக்கவில்லை. அதற்கு பதிலாக சீனப்பெருஞ்சுவர் போன்று ஒரு செயல்திட்டத்தால் இந்த தோல்வியை செய்துகொள்ள முயற்சிக்கிறது. இத்திட்டம்
1981ல் பிரகடனம் செய்யப்பட்ட சட்டம் பதினோரு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு மரம் நடவேண்டும் என்று கோருகிறது. இதன் விளைவாக, 2008-ல் 47000 சதுர கிலோமீட்டர்கள் காட்டை வளர்த்து, காடு வளர்ப்பில் சீனா உலகில் உள்ள எந்த நாட்டையும் அல்லது பிராந்தியத்தையும் விட மிக உயர்ந்த நிலையில் உள்ளது.[4] ஆயினும், தலைவீத காட்டுப் பகுதி சர்வதேச சராசரியை விடவும் மிகவும் பின்தங்கி உள்ளது.[5] சீனாவுக்கான இலட்சிய திட்டங்களாக
ஐரோப்பாஐரோப்பாவும் அதன் வரலாற்று ரீதியான காடுகள் பெரும்பாலானவற்றை அழித்திருக்கிறது. 1990 களில் இருந்து ஐரோப்பிய ஒன்றியமானது, விவசாய நிலத்தை மீண்டும் காடுகளாக்க மானியம் வழங்குவது மற்றும் காடுகளை நிர்வகிக்க பண உதவி வழங்குவது என்று விவசாயிகளுக்கு பணம் வழங்கி காடுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கிறது 1993-க்கும் 1997 க்கும் இடையில் ஐரோப்பிய ஒன்றிய காடு வளர்ப்பு கொள்கைகளானது 5000 சதுர கிலோமீட்டர் நிலத்தில் காடுகளை மீளமைத்தலை சாத்தியமாக்கி இருக்கிறது. 2000 க்கும் 2006 க்கும் இடையில் இயங்கிய இரண்டாவது திட்டம் கூடுதலாக 1000 கிலோமீட்டர் நிலத்தில் (துல்லியமான புள்ளிவிவரம் இன்னும் கிடைக்கவில்லை). அத்தகைய மூன்றாவது திட்டம் 2007 இல் ஆரம்பமானது. போலந்தில், நாட்டின் மொத்த காடுகளது பரப்பு 20 சதவீதமாக சுருங்கியபொழுது, இரண்டாம் உலகப்போருக்குப்பின் அரசாங்கத்தால் தேசிய காடு வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக போலந்தின் காடுகளாக்கப்பட்ட பகுதி ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்ததுடன் 2006 டிசம்பர் 31 அன்று நாட்டின் 29 சதவீதம் பகுதிகளை நிறைத்துள்ளது(பார்க்க:போலந்து காடுகள்). 2050 அளவில் காடுகள் போலந்தின் 33 சதவீத பரப்பை நிறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரான்தற்போது மொத்த நாட்டில் வெறும் சதவீதத்தை மட்டுமே காடுகள் நிறைந்துள்ள ஈரான் உலகின் குறைந்த காடுகள் கொண்ட பகுதியாக கருதப்படுகிறது. கருவாலி மரம், வாதுமை மற்றும் பசுத்த மரம் போன்றவற்றைக் கொண்ட ஆறு மில்லியன் ஏக்கர்கள் என மதிப்பிடப்படும் புதிய காடுகளின் அளவைக்குறைத்து வரும் மதிப்பீடாகும் இது. இங்கு நிலவும் மண் சரிவின் காரணமாக மிக வளமான மண்ணும் குறைந்த அளவு பாறை மற்றும் மண் அரிமாணம் கொண்ட பிற வெப்ப மண்டல பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் காடு வளர்ப்பை செய்தல் கடினமானதாகும். பெரும்பாலான காடு வளர்ப்பானது அந்தந்த நிலத்திற்கு உரிய தாவர இனங்களைக் கொண்டிராததன் [6] காரணமாக, அந்த நிலத்திற்குரிய தாவர மற்றும் உயிரினங்கள் வாழ முடியா நிலைக்கு இட்டுச்செல்வதுடன், உயிரினப்பல்வகைமையின் இழப்பினை விரைவுபடுத்துவதில் முடியும்.[1] காடு வளர்ப்பின் படிநிலைகள்
போன்றவற்றால் பல புதிய காடுகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் காடுகள் அழிவதையும் தடுக்கலாம். அடிக்குறிப்புகள்
குறிப்புதவிகள்
|
Portal di Ensiklopedia Dunia