காத்தவராயன் கதைப்பாடல் (நூல்)
காத்தவராயன் கதைப்பாடல் நா. வானமாமலை அவர்களால் தொகுத்து, ஆய்வு செய்து எழுதப்பெற்ற நூலாகும். [1] இந்த நூலில் வானமாமலை தன்னுடைய ஆய்வு குறித்த கட்டுரையையும், கதைப்பாடலையும் தொகுத்துள்ளார். [1] நாட்டார் வழக்காற்றியல் குறித்து கதைப்பாடல்களில் அதிகம் பேசப்படுகின்றன. வண்ணார்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளதாகவும், அவை முக்கியமான வரலாற்று ஆவணமென்றும் தி இந்து தமிழ் நாளிதழில் பார்க்கத் தகாதவர்களாக்கப்பட்ட மனிதர்கள் என்ற கட்டுரையில் வெ. சந்திரமோகன் கூறுகிறார். [2] இந்நூலை மதுரைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் காத்தவராயன் என்பவரின் வரலாற்றை பதிவு செய்யும் நாட்டார் கதைப்பாடல் இடம்பெற்றுள்ளது. உள்ளடக்கங்கள்
காத்தவராயன் கதைப்பாடல் - இப்பகுதியில் காத்தவராயன் கதைப்பாடல் குறித்து தன்னுடைய ஆய்வினையும், கருத்தையும் வெளிப்படுத்துகிறார். நன்றியுரை - மதுரைத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தல். கதைப்பாடல் - கதைபாடலின் தொகுப்பு குறிப்புகள்- கதைபாடலின் சொற்கள் சிலவற்றுக்கான பொருள், பிற பாடலுடன் ஒப்புமை, விளக்கம் ஆகியவை நிறைந்தது.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia