காந்தா குமாரி பட்நகர்
காந்தா குமாரி பட்நகர் (Kanta Kumari Bhatnagar)[1] (1930கள் - 13 ஆகஸ்ட் 2011) இந்தியாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் பெண் நீதிபதியும், ஆர்வலருமாவார். இவா் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முதல் பெண் நீதிபதி ஆவாா். மேலும் பட்நகர் ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.[2] இவர் ராஜஸ்தானின் முக்கிய பெண் நீதிபதிகளுள் ஒருவராகவும் இருந்தார். சுயசரிதைபட்நகர் 1968 இல் ராஜஸ்தானில் நீதிபதியாக பணியாற்றினார்.[2] 1992 ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார்.[2] காந்தா குமாரி பட்நகர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல் பெண் நீதிபதியாக,[3] சுமார் ஐந்து மாதங்கள் பதவி வகித்தார்.[4] பட்நகர் 2000 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவரானார்.[1] 13 ஆகஸ்ட் 2011 அன்று உதய்பூரில் மாரடைப்பால் 81 வயதில் காந்தா குமாரி பட்நகர் இறந்தார். [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia