காமரூப் பெருநகர் மாவட்டம்காம்ரூப் பெருநகர் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இது, அருகில் உள்ள காம்ரூப் மாவட்டத்தில் இருந்து, 2003 ஆம் ஆண்டின் பிப்ரவரி மூன்றாம் நாளில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[1] அமைப்புஇந்த மாவட்டத்தின் தலைமை இடமாக குவாஹாட்டி நகரம் உள்ளது.[2] இதன் பரப்பளவு மொத்தம் 127.84 சதுர கிலோமீட்டராகும். இந்த மாவட்டத்தின் எல்லா பகுதிகளையும் சுற்றி காம்ரூப் மாவட்டமே இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள்தொகை ஆய்வு2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் பேர் உள்ளனர். 1,260,419 பேர் உள்ளனர். 18.95 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 922 ஆகவும், மக்களின் கல்வியறிவு 88.66 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 2010 ஆகவும் உள்ளது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia