காரடையான் நோன்புகாரடையான் நோன்பு (Karadaiyan Nonbu) என்பது தமிழக இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்கள் மற்றும் மணமாகாத பெண்கள் தங்களின் வருங்கால கணவர்களின் நலனுக்காக நடத்தும் திருவிழாவாகும். எமதருமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை எப்படிக் காப்பாற்றினாள் என்பது தொடர்பானது பண்டிகை இது. இது தெற்கு நாட்காட்டியில் பங்குனி முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. கொண்டாட்டம்வரலாற்று ரீதியாக, திருமணமான பெண்கள் இந்து தெய்வமான கௌரியிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இவர்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்கின்றனர். மகாபாரத காவியத்தில் கூறப்படும் சாவித்திரி மற்றும் சத்தியவான் கதையில் காணப்படுவது போல், தன் கணவர் சத்தியவான் மீது சாவித்திரி காட்டிய பக்தியையும் அன்பையும் பெண்கள் எதிரொலிக்க முயல்கின்றனர். திருமணமான பெண்கள் இந்த காரடையான் நோன்பு தினத்தன்று விரதம் இருப்பார்கள். மங்களகரமான நேரத்திற்கு முன், பெண்கள் தங்கள் பூசை அறையின் முன் கோலமிட்டு, குளித்து, பூசையுடன் விழாவை நடத்துவார்கள். பொதுவாக, அரிசி பொடி மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட பிரசாதம் தயாரிக்கப்பட்டு அம்மனுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கௌரி தேவியின் மீது சாவித்திரியின் பக்தி, மரணத்தின் அதிபதியான யமனிடமிருந்து தன் கணவனின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் வலிமையையும் ஞானத்தையும் அளித்ததாகக் கூறப்படுகிறது. இவள் போரில் வெற்றி பெற்றது ஆயுதங்களினாலோ அல்லது வெடிமருந்துகளாலோ அல்ல, ஆனால் அவளுடைய புத்திசாலித்தனமான வாதங்களால். யமன் அவளுக்கு ஒரு விருப்பத்தை அளித்தபோது, அவள் அதை ஆயிரம் மகன்களுக்காகப் பிரார்த்தனை செய்தாள். அவர் சம்மதித்ததையடுத்து, இந்த ஆசையை நிறைவேற்றச் சாவித்திரி தனது இறந்த கணவனின் உயிரைத் திரும்பப் பெற முயன்றார்.[1] அடை தயாரித்தல்போக் என்பது அரிசி மாவு, கருப்பட்டி, வெல்லம் மற்றும் தேங்காய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு அடையாகும். இது சூடான மற்றும் வெண்ணெய் சேர்த்து உண்ணப்படுகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia