கார்ட்டோசாட்-2இ
கார்டோசாட்-2இ (Cartosat-2E) என்பது விண்ணில் செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது பூமி பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரம் மாநிலம் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி38 ஏவூர்தி மூலம், கார்டோசாட் 2 இ செயற்கைக்கோளும், 30 சூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.நானோ செயற்கைக்கோள்களும் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன நிழற்படக் கருவி, தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அதில் உள்ள நிழற்படக் கருவிகள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. சூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு மையம். கார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ஏவூர்திகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. ராணுவப் பயன்பாடுநாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கார்டோசாட் 1, 2, ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia