காலித் மசால்
காலித் மசால், (அரபி: خالد مشعل Khālid Mashʻal, Levantine Arabic: [xaːled maʃʕal], also transcribed Khaled Mashaal, Khaled Meshaal and Khalid Mish'al; born 28 May 1956) என்பவர் பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவராவார். 2004ல் அப்துல் அஜீஸ் அல்-ரான்திசியின் படுகொலைக்குப் பின் ஹமாஸ் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்..[1] சிரியாவில் உள்ள ஹமாசின் அரசியல் அலுவலகத்திற்கும் இவரே தலைவராக உள்ளார். 2010ல் பிரித்தானிய பத்திரிக்கையான நியூ ஸ்டேட்ஸ்மேன் காலித் மசாலை 'உலகின் செல்வாக்கு மிக்க 50 நபர்கள்' பட்டியலில் இவரை 18வது நபராக அறிவித்தது.[2]. ஹமாஸ் இயக்கத்தின் 25வது வருட தொடக்க நிகழ்வுகளை ஒட்டி 45வருடத்திற்குப் பின் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு வந்துள்ளார்.[3][4] ஹமாஸால் போர்க்கைதியாக பிடிக்கப்பட்ட இசுரேல் இராணுவ வீரர் கிலாத் சலீத் என்பவருக்கு பகரமாக பாலஸ்தீன கைதிகள் 1000 பேரை விடுவிக்க நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக அறியப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia