காலிஸ்தான் ஜிந்தாபாத் படைகாளிஸ்தான் ஜிந்தாபாத் படை ( Khalistan Zindabad Force (KZF) என்பது பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு அமைக்க வேண்டி துவங்கிய காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவு ஆகும். அமைப்பும், செயல்பாடும்காளிஸ்தான் ஜிந்தாபாத் படை சம்மூ காசுமீரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவரின் தலைமையில் செயல்பட்ட ஒரு போராளிக் குழு ஆகும்.[1] இவர் இந்தியாவில் 2008 ஆண்டில் மிகவும் தேடப்படும் 20 பேரில் ஒருவர் ஆவார்.[2] காளிஸ்தான் ஜிந்தாபாத் படையின் வலிமை, வேலைத் திட்டம், திறன்கள் இதுவரை அறியப்படாதவை, ஆனால் இது காளிஸ்தானின் பிற போராளிக் குழுக்களுடன் காஷ்மீரில் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.[1] 2005 திசம்பரில் 25 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் காளிஸ்தான் ஜிந்தாபாத் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கியது.[3] காளிஸ்தான் ஜிந்தாபாத் படை தற்போதய 2008 காலத்திலும் செயல்பட்டுவருகிறது.[1] 2009 ஆண்டு அஸ்திரியாவின வியன்னாவில் ஒரு குருத்துவாராவில் தேரா சச்சா காண்ட் அமைப்பின் தலைவரான ராமா நாட் என்பவரை காளிஸ்தான் ஜிந்தாபாத் படை கொன்றதாகவும் 17பேரை காயமடைய செய்த்தாகவும் கூற்றுகளும்[4][5] மறுப்புகளும் [4] [6] நிலவுகின்றது.,[7][8] இதனால் இந்தியாவின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.[9][10][11][12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia