கால்சாவின் மரபுடமை
கால்சாவின் மரபுடமை ( Punjabi: ਵਿਰਾਸਤ-ਏ-ਖਾਲਸਾ, விரசத்-இ-கால்சா, Virasat-e-Khalsa) பஞ்சாபின் தலைநகரம் சண்டிகர் அருகிலுள்ள புனித நகரம் அனந்த்பூர் சாகிபில் உள்ள சீக்கிய அருங்காட்சியகமாகும். சீக்கிய வரலாற்றின் 500 ஆண்டுகளையும் பத்தாவதும் கடைசி குருவுமான குரு கோவிந்த் சிங்கின் புனிதமொழிகளுக்கேற்ப கால்சா உருவானதின் 300ஆவது ஆண்டுவிழாவினையும் கொண்டாட இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம்பள்ளத்தாக்கின் இருபுறங்களிலிலுமாக இரண்டு வளாகங்கள் உள்ளன; இவை அலங்கார பாலமொன்றால் இணைக்கப்பட்டுள்ளன:
கட்டிடங்கள் அந்த இடத்திலேயே ஊற்றப்பட்ட காங்கிறீட்டால் கட்டப்பட்டுள்ளது; சில உத்தரங்களும் தூண்களும் மூடப்படாது உள்ளன; ஆனால் பெரும்பாலான கட்டமைப்புகள் உள்ளூர் தேன் வண்ண கற்களால் வேயப்பட்டுள்ளது. இரட்டை வளைவைக் கொண்டுள்ள கூரைகள் எஃகினால் வேயப்பட்டுள்ளன. இரவில் இவை வானத்து ஒளியை எதிரொளித்து பள்ளத்தாக்கிலுள்ள நீர்நிலைகள் இவற்றை மீள் எதிரொளிக்கின்றன.[1] இந்தக் கட்டிடத்தின் கட்டிடவடிவியலை மோஷே சாஃப்தீ நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர். கேள்-காண் அடக்கம், திரைப்படங்கள், திறந்தவெளி இசை மற்றும் விவரணங்களை பாபி பேடியின் கலைடோசுகோப் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். மேற்சான்றுகள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia