காளிங்கராயன்பாளையம்
காளிங்கராயன்பாளையம் (ஆங்கிலம்: Kalingarayanpalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 221 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°26′06″N 77°40′37″E / 11.4349°N 77.6770°E ஆகும். ஈரோடு, பவானி, லட்சுமி நகர், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், ஊராட்சிக்கோட்டை மற்றும் சித்தோடு ஆகியவை காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும். ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் காளிங்கராயன்பாளையம் பகுதியில் இயங்குகின்றன.[3] மாரியம்மன் கோயில் ஒன்று காளிங்கராயன்பாளையம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[4][5] காளிங்கராயன்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia