காவ்யா பதிப்பகம்காவ்யா பதிப்பகம் என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனமாகும். 1981 ஆம் ஆண்டில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் முனைவர் சு. சண்முகசுந்தரம் என்பவர் தனது மகள் காவ்யாவின் முதல் பிறந்த நாளன்று “காவ்யா பதிப்பகத்தைத் தொடங்கினார். “நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்” என்கிற எண்ணத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம், ஆய்வுகள், விமர்சனங்கள் என இதுவரை 700 க்கும் மேற்பட்ட நூல்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் இலக்கியத் தடங்கள், வட்டாரச் சிறுகதைகள், தொகுப்புகள், அறிஞர்களின் கட்டுரைக் களஞ்சியம், நாட்டுப்புறவியல், தெய்வங்கள் தொகுப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பரிசு மற்றும் விருதுகள்காவ்யா பதிப்பகத்தின் நூல்கள் இதுவரை 25 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது. சாகித்ய அகாதமி பரிசு
தமிழ்நாடு அரசு பரிசுகாவ்யா பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் பரிசு பெற்ற நூல்களின் அட்டவணை இது.
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia