கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ்
கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ் (Sir Christopher Antoniou Pissarides, பிறப்பு: பிப்ரவரி 20, 1948 [1] ) ஒரு பிரித்தானிய-சைபிரியாட் பொருளியல் நிபுணர். இவர் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் போராசிரியர் மற்றும் லண்டன் மேலாண்மை பள்ளியில் ரிகுஸ் பேராசிரியர். இவரின் ஆராய்ச்சிகள் பருபொருளியல், பொருளாதார வளர்ச்சி, தொழிலாளர் பொருளாதாரம் மற்றும் பொருளாதார கொள்கை பற்றியதாக இருந்தது. 2010 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுபீட்டர் ஆர்தர் டயமண்ட் மற்றும் தாலே தோமஸ் மார்டென்சென் உடன் இணைந்துப் பெற்றார்.[4] ஆரம்ப வாழ்க்கைபிசாரைட்ஸ் நிகோசியா, சைப்பரஸ் ஒரு கிரேக்க குடும்பத்தில் பிறந்தார்.[5][6] அவர் பான்சைபிரியன் ஜிம்னாசிய்ம், நிகோசியாவில் பயின்றார். இவர் எசக்ஸ் பல்கலைகழகத்தில் 1970 ஆம் ஆண்டில் இளங்கலை (BA ) பொருளியல் பட்டமும் மற்றும் 1971 ஆம் ஆண்டில் முதுகலை பொருளியல் (MA) பட்டமும் பெற்றார். இதனை தொடர்ந்து லண்டன் மேலாண்மைப் பள்ளியில் 1973 ஆம் ஆண்டில் மிசியோ மோரிசிமா மேற்பார்வையில் முனைவர் பட்டம் (PhD) பெற்றார். ஆசிரியர் பணிஇவர் லண்டன் மேலாண்மைப் பள்ளியில் ரிகுஸ் பேராசிரியாராக 1976 ஆம் ஆண்டு முதல் இருந்தார் [7] மற்றும் பருப்பொருளியல் துறையின் ஆசிரியராகவும் இருந்தார். 1974 முதல் 1976 வரையில் செளத்தாம்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1979 முதல் 1980 வரை ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் 1990 முதல் 1991 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) வருகை பேராசிரியராகவும் இருந்திருக்கிறார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia