கிளிநொச்சித் தாக்குதல், 1998கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998 என்பது இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருக்கும் கிளிநொச்சி நகரத்தில் நிலைகொண்டிருந்த சிறி லங்கா இராணுவத்திடமிருந்து அந்நகரைக் கைப்பற்றவென விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட ஓர் இராணுவ நடவடிக்கையாகும்.[1][2][3] பின்னணி
தாக்குதல்பெப்ரவரி 1, 1998 அன்று அதிகாலை கிளிநொச்சி நகரம் மீதான புலிகளின் தாக்குதல் தொடங்கியது. கிளிநொச்சிக் களத்துக்கு உறுதுணையாக இராணுவத்தினரின் பின்தளங்களில் பெருமெடுப்பில் கரும்புலித் தாக்குதலும் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் பல பகுதிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டன. ஆனால் அன்று மாலை நிலைமை புலிகளுக்குப் பாதகமாகியது. புலிகளால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டது. தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே, புதிய களமுனைகளைத் திறக்காமல், கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டு தமது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டனர் புலிகள். சமநேரத்தில் பின்னணித் தளமான ஆனையிறவு ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். மூன்று வெவ்வேறு இலக்குகள் மீது மூன்று அணிகளாகப் பிரிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களும் எதிர்பாராத விதத்தில் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வணிகளில் சென்ற பதினொரு கரும்புலி வீரர்கள் சாவடைந்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
கிளிநொச்சிக் களத்தில் ஒரு களமுனையில் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மூலம் கரும்புலித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வாகனமும் இலக்கை அடைந்து வெடிக்கவில்லை. அவ்வாகனத்தைச் செலுத்திச் சென்ற கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகியோர் சாவடைந்தனர். எதிர்பார்த்தது போல் வெற்றியில்லாவிட்டாலும் முக்கியமான சில பகுதிகள் இந்நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாண்டின் செப்டம்பரில் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரை முற்றாகக் கைப்பற்றினர் புலிகள். இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia