குஞ்சன் நாடார்குஞ்சன் நாடார் (Kunjan Nadar) கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைய குமரி மாவட்ட மக்கள் நடத்திய தெற்கு எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டவர். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் நெய்யாற்றின்கரை தாலுகா திரிபுரம் என்ற ஊரில் 1911 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தென்குரல் என்ற பத்திரிக்கையை நிறுவினார். பொதுவாழ்க்கை
கருத்துகள்
ஒரு முதல்வர் மலையாளிகளைத் தமிழர்கள் மீது ஏவி விடும் போக்கில் பழவங்காடியில் பேசியிருப்பது வருந்தத்தக்கது. இப்போது ஒன்றை நான் கூறியாக வேண்டியுள்ளது. தென்திருவிதாங்கூரில் உள்ள மலையாளிகள் யாராவது ஒருவர் தமிழர்களால் துன்பப் படுத்தப்பட்டிருப்பரா?. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பட்டம் சுட்டிக் காட்ட முடியுமா?. அவருடைய எண்ணத்திற்கு மாறாக தமிழர்களும், மலையாளிகளும் சகோதரர்களாக நிம்மதியாக இருக்கின்றனர். தமிழர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று இன்று மலையாள சகோதரர்கள் கூறுவதை பட்டம் இதுவரை கேட்காதிருந்தால் இனியாவது கேட்டு உள்ள நிலைமையை தெரிந்து கொள்வார் என்று நம்புகின்றேன். (ஆகத்து 8, 1954 தினமலர் செய்தி)
இவர் ஆகத்து 19, 1974இல் காலமானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia