குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி
குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி (Guntakandla Jagadish Reddy) (பிறப்பு: ஜூலை 18, 1965), ஜிஜேஆர் என்ற தனது முதலெழுத்துக்களால் அடிக்கடி குறிப்பிடப்படும் இவர், ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். [1] தெலங்காணா அரசில் எரிசக்தி அமைச்சராக 2 ஜூன் 2014 முதல் பணியாற்றினார்.[2][3] இவர் சூர்யாபேட் தொகுதியில் இருந்து தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[4][5] பாரத் இராட்டிர சமிதி கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் உள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைஇந்தியாவின், தெலங்காணா மாநிலட்த்தில், சூர்யாபேட் டை மாவட்டம், அர்வப்பள்ளி மண்டலம், நாகரம் என்ற கிராமத்தில் இராமச்சந்திர ரெட்டி மற்றும் சாவித்திரிக்கு பிறந்தார். இவருக்கு நான்கு உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் 1985 இல் சூர்யாபேட்டை சிறீ வெங்கடேசுவரா கல்லூரியில் ( உசுமானியா பல்கலைக்கழகம் ) இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் விசயவாடாவில் உள்ள சித்தார்த்தா சட்டக் கல்லூரியில், ( நாகார்ஜுனா பல்கலைக்கழகம்) சட்ட இளங்கலைப் பட்டம் பெற்றார். தொழில்நல்கொண்டா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவர் நல்கொண்டா மாவட்டத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் முதல் தலைவராகவும் இருந்தார். அரசியல்இவர் 2001 இல் தெலங்காணா இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர், பாரத் இராட்டிர சமிதியின்ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். [6] இவர் 2009 இல் உசூர்நகர் தொகுதியிலும், பின்னர் 2014 பொதுத் தேர்தலில் சூர்யாபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் சூர்யபேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia