குருநாகல் தொடருந்து நிலையம்
குருநாகல் தொடருந்து நிலையம் ( சிங்களம்: කුරුණෑගල දුම්රිය ස්ථානය) இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையமாகும். கடல் மட்டத்திலிருந்து 122.86 மீட்டர்கள் (403.1 அடி) உயரத்தில், வடக்குப் பாதையில் 5வது நிலையமாகவும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து 39வது ரயில் நிலையமாகவும் அமைந்துள்ளது. இது குருநாகல் நகர மையத்திலிருந்து 2.2 km (1.4 mi) தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பல தொடருந்துகளுக்கான முனையமாக செயல்படுகிறது. வடக்குப் பாதை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பாதைகளில் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் இந்த நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. இருப்பினும் சில நகர்சேர் கடுகதி தொடருந்துகள் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த நிலையத்தில் பல கடந்து செல்லும் சுழல்கள் அல்லது பக்கவாட்டுகளுடன் ஒரு தளமும் தொடருந்துகளை மாற்றுவதற்கு வசதியாக குறுக்கு வளையப் பாதையும் உள்ளது. வரலாறு1891 இல் வெளியிடப்பட்ட யாழ்பாண ரயில்வே ஆணைக்குழுவின் அறிக்கை பொல்காவலையிலிருந்து குருநாகல் வரை புதிய தொடருந்துப் பாதையை (தற்போது வடக்குப் பாதை என அழைக்கப்படுகிறது) அமைப்பதற்கும் யாழ்ப்பாணத்திற்கான ஒரு பாதையின் சாத்தியப்பாட்டைப் பரிசீலிக்கவும் பரிந்துரைத்தது. இந்த பாதை பொல்காவலை சந்தியில் முதன்மைப் பாதையுடன் இணைவதோடு, தலைநகர் கொழும்புக்கு தொடருந்துகளை இயக்க உதவும். 1892 ஆம் ஆண்டு இந்த பாதையை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. குருநாகலுக்கு புதிய பாதை 14 பெப்ரவரி 1894 அன்று ஆளுநர் சர் ஆர்தர் எலிபேங்க் ஹெவ்லாக் அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. வடக்குப் பாதையின் எஞ்சிய பகுதியின் கட்டுமானம் தொடர்ந்தது. 1905 ஆகஸ்ட் 1 அன்று, கொழும்பில் இருந்து முதல் தொடருந்து யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை வந்தடைந்தது. வழித்தடம்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia