குரு. சண்முகநாதன்

குரு. சண்முகநாதன் (பிறப்பு: டிசம்பர் 14, 1944)என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் எனும் ஊரில் பிறந்த இவர் தமிழ்நாடு அரசின் சிறைத்துறையில் நன்னடத்தை அலுவலராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இவர் 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “நல்லெண்ணெயின் மருத்துவ ரகசியங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் வகைப்பாட்டிலும், இவர் எழுதிய “நாட்டுப்புறப் பாடல்களும் நல்லெண்ணெயும்” எனும் நூல் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya