குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

இரண்டாம் குலோத்துங்கனைச் சிறப்பித்து அவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகும். இது பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த கி.பி 12ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.[1] இரண்டாம் குலோத்துங்கன் மீது அவர் பாடிய முதல் நூல் குலோத்துங்கன் உலா ஆகும்.

நூல் அமைப்பு

103 பாடல்களைக் கொண்ட இந்நூலில் 16 பாடல்கள் மட்டும் முழுமையாகக் கிடைக்காமல் சிதைந்துள்ளன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாக கூறப்படுவதால் திருமாலுடைய அவதாரச் செயல்கள் பலவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.[2]

முன்னவர் வரலாறு

பிற்காலச் சோழ மன்னர்களான இராசராசன், இராசேந்திரன், இராசாதிராசன், முதற்குலோத்துஙகன், விக்கிரமன் ஆகிய இவனது முன்னவர்களின் வரலாற்றை நிரல்பட விளக்கியுள்ளார்.[2]

பருவங்கள்

இரண்டாம் குலோத்துங்கனின் வீரச் செயல்களையும், ஏனைய செய்திகளையும் சுவைபடத் தொகுத்து ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனைப் பிள்ளையாகப் பாவித்து காப்புப்பருவம், செங்கீரைப்பருவம், வாரானைப்பருவம், அம்புலிப்பருவம், சிறுபறைப்பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப்பருவம் எனப் பத்துப் பருவங்களின் வாயிலாக அவன் புகழ் உரைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. பிள்ளைத்தமிழ் நூல்கள்
  2. 2.0 2.1 2.2 குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya